ஆப்நகரம்

கல்யாண மாப்பிள்ளை கைது.... கைது செய்தவர் யார் தெரியுமா?

திருமணத்திற்கு வைத்த பேனரில் வாலிபர் கைது என இடம் பெற்றிருந்த வசனத்தால் அந்த பேனர் வைரலாக பரவி வருகிறது.

Samayam Tamil 28 Jan 2020, 10:23 am
சேலம் மாவட்டம் மேட்டூர் மாசிலா பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஹெலன் சந்தியா, இவருக்கும் கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடியை சேர்ந்த ஸ்டீபன் ராஜ் என்பவருக்கும் வரும் 30ம் தேதி திருமணம் நடக்கிறது.
Samayam Tamil Banner


இதற்கு மணமகன் வீட்டார் சார்பில் அவர்கள் ஊரில் ஒரு பேனர் வைத்திருக்கின்றனர். அந்த பேனரில் உள்ள வசனம் தான் சிறப்புக்கூறு. திருமண விழா என்ற இடத்தில் வாலிபர் கைது என்றும்,
மணமகன் என்ற இடத்தில் கைதானவர் என்றும், மணமகள் எனும் இடத்தில் கைது செய்தவர் என்றும், குற்றம் பெண்ணின் மனதைத் திருடியது என்றும், தீர்ப்பு மனதைத் திருடிய பெண்ணை திருமணம் செய்வது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

Also Read : கோடி கணக்கில் பணத்தை வீட்டில் வைத்து வைத்து விட்டு பூட்டாமலேயே செல்லும் மக்கள்... கதவுகளே இல்லாத சனி சிங்கனாப்பூர் கிராமம்...

இந்த பேனர் பார்க்கவே நகைச்சுவையாக இருப்பதால் பலரை ஈர்த்துள்ளது. நெட்டிசன்கள் பலர் இந்த பேனரின் புகைப்படத்தைச் சமூகவலைத்தளங்களில் டிரெண்ட் செய்து வருகின்றனர். இந்த பேனர் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

அடுத்த செய்தி