ஆப்நகரம்

"கண்டிப்பாக ஓட்டு போடுவாம்" ஒரே மேடையில் திருமணம் செய்த 11 தம்பதிகள் உறுதிமொழி

உ.பி மாநிலம் கான்பூரில் ஆதிவாசி கல்யாண் சமதி என்ற அமைப்பின் சார்பில் 11 ஜோடிகளுக்கு ஒரு மேடையில் திருமணம் நடந்தது. 11 தம்பதிகளும் தேர்தலில் வாக்களிப்பதாக உறுதி மொழியை எடுத்துக்கொண்டனர்.

Samayam Tamil 8 Apr 2019, 4:41 pm
இந்தியாவில் தேர்தல் என்றால் திருவிழா தான். இந்தியாவில் உள்ள 18 வயதை கடந்த அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமை உள்ளது. இது ஒவ்வொரு இந்தியரின் கடமை என்றாலும் பலர் வாக்களிக்க சிறிய முயற்சிகளை கூட எடுப்பது இல்லை.
Samayam Tamil ஒரே மேடையில் திருமணம் செய்த 11 தம்பதிகள் உறுதிமொழி


இந்நிலையில் உ.பி மாநிலம் கான்பூரில் ஆதிவாசி கல்யாண் சமதி என்ற அமைப்பின் சார்பில் 11 ஜோடிகளுக்கு ஒரு மேடையில் திருமணம் நடந்தது.
Read More: குபீர் சிரிப்பை கிளப்பும் பா.ஜ., வின் போலி தேர்தல் அறிக்கை...! யாரு பார்த்த வேலைடா இது?

திருமணம் முடிந்ததும். இந்த தம்பதியினர் திருமண மேடையிலேயே 7 உறுதிமொழிகளை எடுத்துக்கொள்வது அதிவாசி கல்யாண் சமதி அமைப்பின் மூலம் நடக்கும் திருமணத்தில் வழக்கமான ஒன்று தான்.

ஆனால் இந்த முறை நடந்த திருமணத்தின் போது 8வதாக ஒரு உறுதி மொழி சேர்க்கப்பட்டது அதன் படி தேர்தல்களில் கட்டாயம் வாக்களிப்போம் என்ற உறுதிமொழியும் சேர்க்கப்பட்டது. அதன்படி 11 தம்பதிகளும் தேர்தலில் வாக்களிப்பதாக உறுதி மொழியை எடுத்துக்கொண்டனர்.
Read More: இந்த வயசுலயே ஸ்கூல "கட்" அடிக்க இப்படியெல்லாம் ஐடியா பண்ணுதே இந்த பொண்ணு...!

இந்தியாவில் வரும் ஏப் 11ம் தேதி துவங்கி மே 19 தேதி வரை 7 கட்டங்களாக மக்களைவை தேர்தல் நடைபெறுகிறது. உலகிலேயே நடக்கும் மிக பெரிய ஜனநாயக தேர்தல் இதுதான். வாக்கு எண்ணிக்கை நிகழ்ச்சி வரும் மே மாதம் 23ம் தேதி நடக்கிறது.

அடுத்த செய்தி