ஆப்நகரம்

The Unemployment Nightmare: இந்த காரணத்திற்காக தான் முதுகலை பட்டதாரிகள் துப்புரவு பணிக்கு விண்ணப்பித்தார்களா?

தமிழ்நாடு தலைமை செயலகத்தில் துப்புரவு பணியாளர்கள் பணிக்கு முதுகலை பட்டதாரிகள் பலர் விண்ணப்பித்திருந்தனர். வேலையில்லா திண்டாட்டத்தால் தான் அவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பித்தார்களா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

Samayam Tamil 7 Feb 2019, 4:37 pm
தமிழ்நாடு தலைமை செயலகத்தில் துப்புரவு பணியாளர்கள் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுவதாக கடந்த 2018ம் ஆண்டு செப் 26ம் தேதி அறிவிப்பு வெளியானது.
Samayam Tamil இந்த காரணத்திற்காக தான் முதுகலை பட்டதாரிகள் துப்புரவு பணிக்கு விண்ணப்பித்தார்களா?


இந்த அறிவிப்பு வெளியான தேதி முதல் அதற்கான காலகெடு முடியும் தேதி வரை மொத்தம் 4,607 விண்ணப்பங்கள் மொத்தமான வந்தது. இந்த பணிக்கு சேருவதற்கு கல்வி தகுதி எதுவும் தேவையில்லை. 18 வயதை கடந்திருந்தால் போதும். மேலும் முழு உடல் தகுதியுடன் இருக்க வேண்டும்.

இந்நிலையில் இந்த பணிக்கு பெறப்பட்ட விண்ணப்பங்களில் 677 விண்ணப்பதாரர்களுக்கு தகுதியில்லை என்று அவர்களின் விண்ணப்பங்கள் நிராகிரிக்கப்பட்டன. மற்றவர்கள் அனைவரும் தகுதி பெற்றவர்களாக அறிவிவிக்கப்பட்டனர்.

Read More: செக்ஸ் சாட் செய்து வசமாக சிக்கி கொண்ட மதன் கெளரி..! அரை நிர்வாண புகைப்படங்களும் வெளியானது..!

இந்த பட்டியலில் கல்வி தகுதியாக எம்டெக், பிடெக், எம்பிஏ போன்ற முதுகலை படிப்புகளை படித்தவர்களும், மேலும் பல பட்டதாரிகளும் இந்த பணிக்காக விண்ணப்பித்திருந்தனர்.

இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் தற்போது மீண்டும் அதிகரித்துவருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்வி தகுதியே தேவையில்லாத ஒரு பணிக்கு முதுகலை பட்டம் படித்தவர்கள் விண்ணப்பித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read More: இந்திய அளவில் டிரெண்டாகும் #justiceforramalingam - டுவீட்டர் பதிவுகள்

அடுத்த செய்தி