நாம் பள்ளிகளில் படிக்கும் போது சிலர், குறிப்பிட்ட அறையில் பேய் இருப்பதாகும், அங்கு யாரோ ஒருவர் மரணமடைந்ததாகவும், பேய் கதை சொல்லி பயமுறுத்துவார்கள். இப்படியாக பேய் கதைகள் எல்லோரும் குழந்தையாக இருக்கும் போது கேட்டிருப்போம். ஆனால் இப்படியான ஒரு பேய்க்கதையை தற்போது உண்மையிலேயே ஒரு கல்லூரி நிர்வாகம் சொல்லி வருகிறது.
அதற்கு முதலில் அவர் தகவல் கேட்கும் போது கோப்புகள் எல்லாம் சிபிஐ வசம் இருப்பதாகவும் அவர்கள் அதை சீல் வைத்துள்ளதாகவும், அதனால் தகவல் தர முடியாது என கூறியுள்ளனர். இரண்டாம் முறை கேட்கும் போது கோப்புகள் எல்லாம் கிளார்க் வசம் இருப்பதாகவும், கிளார்கை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். மூன்றாம் முறை கேட்டபோது அந்த கோப்புகளை கையாண்ட கிளர்க் அந்த கோப்புகள் உள்ள அறையிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது ஆவி அந்த அறைக்குள் இருப்பதால் அந்த அறைக்குள் செல்ல அனைவரும் பயன்படுகின்றனர். அதனால் இப்பொழுது தகவல் தர முடியாது என பதிலளித்துள்ளனர்.
கல்லூரியில் கோப்பு உள்ள அறையில் பேய் இருப்பதாக கல்லூரி நிர்வாகமே கூறியுள்ளது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலர் இந்த தகவலை தரமுடியாது என்பதால் கல்லூரி நிர்வாகம் சப்பை கட்டு கட்டுவதாக தெரிவிக்கின்றனர். இது குறித்த உங்கள் கருத்து என்ன? கமெண்டில் சொல்லுங்கள்.