ஆப்நகரம்

"பிக்பாஸ் வீட்டிற்குள் கைது செய்யப்படுவார் மீரா மிதுன்" : அழகி போட்டி ஒருங்கிணைப்பாளர் பரபரப்பு பேட்டி

மீரா மிதுன் மீது வழக்கு இருக்கிறது, அந்த வழக்கிற்காக அவர் பிக்பாஸ் வீட்டிற்குள்ளேயே கைது செய்யப்படலாம் என ஜோ மைக்கேல் பேட்டியளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வரும் நாட்களில் பிக்பாஸில் பல பரபரப்பான சம்பவங்கள் நடக்கும் என நாம் எதிர்பார்க்கலாம்.

Samayam Tamil 27 Jun 2019, 3:34 pm
பிக்பாஸ் வீட்டிற்குள் மூன்றாம் நாளான நேற்று காலையிலேயே அபிராமிக்கும் மீராவிற்கும் இடையே பிரச்சனை ஆரம்பித்தது. அதை அப்படியே விட்டால் சரியாகியிருக்கும் ஆனால் அதை தட்டி கேட்கிறேன் என்று வனிதா மீராவுடன் சண்டை போட வீட்டில் முதல் சண்டை ஆரம்பித்துவிட்டது.
Samayam Tamil பிக்பாஸ் வீட்டிற்குள்ளேயே கைது செய்யப்படுவார் மீரா மிதுன்


இந்நிலையில் மீராமிதுன் இதற்கு முன்னர் மிஸ் சவுத் இந்தியா என்ற பட்டம் பறிக்கப்பட்டது. இவர் மிஸ் தமிழ்நாடு திவா என்ற தலைப்பில் அழகி போட்டி நடத்த முயன்று பிரச்சனையில் வேறு சிக்கினார்.

இந்நிலையில் இவர் அழகி போட்டி நடத்த முயன்ற போதே அதை தடுத்த ஜோ மைக்கேல் என்பவர் தற்போது சில யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறுவதாவது : "மீராமிதுன் மீது 3 காவல் நிலையத்தில் நாங்கள் புகார் அளித்துள்ளோம் அதற்காக சிஎஸ்ஆர் போடப்பட்டுள்ளது. அவரை பிடித்து விசாரிக்க போலீசார் அவரை தேடிவந்த நிலையில் அவர் தலைமறைவாகியிருந்தார். இந்நிலையில் திடீரென விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் சென்றுவிட்டார்.

வழக்கு இருக்கும் ஒருவருக்கு பிக்பாஸ் வீட்டிற்குள் எப்படி அனுமதி கிடைத்தது என தெரியவில்லை. இதுவரை அவர் எங்கிருக்கிறார் என்பது தெரியாமல் இருந்தது. தற்போது தெரிந்துவிட்டது. இனி நாங்கள் போலீசில் சொல்லி அவர் மீது நடவடிக்கை எடுக்க வழி செய்வோம். அதனால் அவர் பிக்பாஸ் வீட்டிற்குள்ளேயே போலீசாரால் கைது செய்யப்படலாம்.

இவர் என்னை மட்டுமல்ல மொத்தம் 4 பேரை ஏமாற்றியுள்ளார். பிக்பாஸ் வீட்டிற்குள் இன்னும் 2-3 நாட்களில் அவரின் சுயரூபம் தெரிந்துவிடும். அபிராமி, சாக்ஷி, மீரா மூன்று பேரும் முன்னரே அறிமுகமானவர் தான். மேலும் மீராவிடம் இருந்து பறிக்கப்பட்ட அழகிபட்டம் வேறு பெண்ணிற்கு வழங்கப்பட்டது. அந்த பெண்ணின் பாய் பிரெண்ட் தான் பீக்பாஸ் வீட்டிற்குள் இருக்கு இலங்கையை சேர்ந்த மாடல் தர்ஷன்" எனகூறினார்.

மீரா மிதுன் மீது வழக்கு இருக்கிறது, அந்த வழக்கிற்காக அவர் பிக்பாஸ் வீட்டிற்குள்ளேயே கைது செய்யப்படலாம் என ஜோ மைக்கேல் பேட்டியளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வரும் நாட்களில் பிக்பாஸில் பல பரபரப்பான சம்பவங்கள் நடக்கும் என நாம் எதிர்பார்க்கலாம்.

அடுத்த செய்தி