பொதுவாக அனைத்து நாடுகளிலும் இராணுவம் மற்றும் காவல் துறை இவை இரண்டும்தான் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் மிக முக்கியமான அமைப்புகளாக உள்ளன. அதனால் அவர்கள் செய்யும் சில விஷயங்கள் நன்மையா? தீமையா? என்கிற விஷயத்தை தாண்டி உடனே விவாத பொருளாக மாறிவிடுகின்றன. அந்த வகையில் மக்களுக்கு அச்சத்தை அதிகரிக்க கூடிய ஒரு விஷயமாக இந்த வீடியோ அமைந்துள்ளது.
இலங்கையில் ஏற்கனவே பொருளாதார பிரச்சனைகள் காரணமாக மக்கள் பல்வேறு வகையான இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் இலங்கை ராணுவ அதிகாரி ஒருவர் பொது மக்களில் ஒருவரை தாக்கியுள்ளார். இந்த வீடியோ தற்சமயம் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
அவரது சீருடையை வைத்து பார்க்கும்போது அவர் உயரிய பதவியில் உள்ள அதிகாரியாக இருக்கலாம் என யூகிக்கப்படுகிறது. அந்த மனிதரை ராணுவ வீரர் அடித்த பிறகு கூட்டம் கூடுகிறது. அந்த இராணுவ வீரர் தனது காலால் அந்த மனிதனை ஓங்கி உதைப்பதை வீடியோவில் பார்க்க முடிகிறது.
வீடியோ:
அதை வைத்து பார்க்கும்போது ஏற்கனவே இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது தெரிகிறது. ஆனால் சண்டை அதிகமாகி ராணுவ வீரர் அடிக்க சென்ற காட்சி மட்டும் பதிவு செய்யப்பட்டிருக்கலாம். சில இலங்கை காவலாளிகளும் கூட அந்த நிகழ்வின் போது அங்கு நின்றுள்ளனர்.
அங்கு நிறைய இராணுவ வீரர்கள் இருப்பது தெரிகிறது. எதனால் அந்த இராணுவ வீரர் தாக்கினார் என தெரியவில்லை. ஆனால் அந்த பெட்ரோல் நிலையத்தின் உதவியாளர் இதுகுறித்து கூறும்போது, பெட்ரோல் போட வந்த அந்த மனிதர்கள்தான் முதலில் பிரச்சனை செய்ததாக கூறுகிறார். இதனால்தான் இராணுவத்தினர் அவரை தாக்கினாராம். வந்த நபர்கள் காவலர்கள் மற்றும் இராணுவத்தினரை தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் காரணமாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் பொதுவாக இதை பார்க்கும் நெட்டிசன்கள் பலரும் இது இந்தியாவில் நடந்த நிகழ்வு என நினைத்து கொண்டுள்ளனர். மேலும் அதிகமான மக்கள் அந்த இராணுவ வீரரை விமர்சித்து வருகின்றனர்.
கைது செய்த இருவரையும் இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இலங்கையில் ஏற்கனவே பொருளாதார பிரச்சனைகள் காரணமாக மக்கள் பல்வேறு வகையான இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் இலங்கை ராணுவ அதிகாரி ஒருவர் பொது மக்களில் ஒருவரை தாக்கியுள்ளார். இந்த வீடியோ தற்சமயம் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
அவரது சீருடையை வைத்து பார்க்கும்போது அவர் உயரிய பதவியில் உள்ள அதிகாரியாக இருக்கலாம் என யூகிக்கப்படுகிறது. அந்த மனிதரை ராணுவ வீரர் அடித்த பிறகு கூட்டம் கூடுகிறது. அந்த இராணுவ வீரர் தனது காலால் அந்த மனிதனை ஓங்கி உதைப்பதை வீடியோவில் பார்க்க முடிகிறது.
வீடியோ:
அதை வைத்து பார்க்கும்போது ஏற்கனவே இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது தெரிகிறது. ஆனால் சண்டை அதிகமாகி ராணுவ வீரர் அடிக்க சென்ற காட்சி மட்டும் பதிவு செய்யப்பட்டிருக்கலாம். சில இலங்கை காவலாளிகளும் கூட அந்த நிகழ்வின் போது அங்கு நின்றுள்ளனர்.
அங்கு நிறைய இராணுவ வீரர்கள் இருப்பது தெரிகிறது. எதனால் அந்த இராணுவ வீரர் தாக்கினார் என தெரியவில்லை. ஆனால் அந்த பெட்ரோல் நிலையத்தின் உதவியாளர் இதுகுறித்து கூறும்போது, பெட்ரோல் போட வந்த அந்த மனிதர்கள்தான் முதலில் பிரச்சனை செய்ததாக கூறுகிறார். இதனால்தான் இராணுவத்தினர் அவரை தாக்கினாராம். வந்த நபர்கள் காவலர்கள் மற்றும் இராணுவத்தினரை தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் காரணமாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் பொதுவாக இதை பார்க்கும் நெட்டிசன்கள் பலரும் இது இந்தியாவில் நடந்த நிகழ்வு என நினைத்து கொண்டுள்ளனர். மேலும் அதிகமான மக்கள் அந்த இராணுவ வீரரை விமர்சித்து வருகின்றனர்.
கைது செய்த இருவரையும் இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.