ஆப்நகரம்

இந்த கிராமத்தில் உள்ள ஆண்களுக்கு எல்லாம் இரண்டு மனைவிகளாம்...!

உ.பி மாநிலத்தில் உள்ள கிராமத்தில் ஆண்களுக்கு இரண்டு மனைவிகள் இருக்கிறார்களாம். என்ன காரணம் என கீழே காணுங்கள்.

Samayam Tamil 22 Jul 2019, 6:11 pm
உத்திரபிரதேச மாநிலம் லக்கம்பூர் கேரி என்ற மாவட்டத்தில் பதேபூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள பல ஆண்களுக்கு இரண்டு அல்லது மூன்று மனைவிகள் இருக்கின்றனர்.
Samayam Tamil இந்த கிராமத்தில் உள்ள ஆண்களுக்கு எல்லாம் இரண்டு மனைவிகளாம்...!


இதை இந்த கிராம மக்கள் சமூக கவுரவமாக கருதுகின்றனர். இவர்கள் இரண்டு மூன்று பெண்களை மனைவியாக கட்டினாலும் அனைவரையும் ஒரே வீட்டில் வைத்து ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு பல மனைவிகள் குறித்த பிரச்னைகளே ஏற்படுவதில்லை.

பெண்களும் ஆண்களை ஏற்கனவே திருமணமானவர் என்பதை தெரிந்தே திருமணம் செய்து கொள்கிறார்கள். பல தலைமுறைகளாக பாரம்பரிய கலாச்சாரமாக இந்த பல தார திருணம் இந்த கிராமத்தில் இருந்து வருகிறது.

இது மட்டுமல்ல இந்த கிராமத்தில் பல தாரம் திருமணம் செய்தவர்கள் பெரும்பாலும் அரசு ஊழியர்களாவே இருப்பார்கள். அதேபோல பல தார திருமணம் செய்தவர்கள் அவர்களது காலத்திற்கு பின்பு அவர்களது சொத்துக்களை வாரிசுகளுக்கு தாரம் பார்க்காமல் அனைவருக்கும் சரி பங்காக பிரித்து கொடுப்பதிலும் சண்டைகள் சச்சரவுகள் இல்லாமல் இருக்கின்றனர்.

உலகத்தில் ஒரு மனைவியை கட்டி அவர்களை சமாளிக்க முடியாமல் திணரும் ஒரு கூட்டமும், அந்த ஒரு மனைவியும் கிடைக்காமல் கனவிலேயே குடும்பம் நடத்தும் கூட்டமும் பெருகி கொண்டே இருக்கும் நிலையில் இந்த கிராமத்தில் ஆண்கள் இரண்டு, மூன்று மனைவிகளை திருமணம் செய்து கொண்டு வாழும் செய்தி பெரும் வைரலாக பரவி வருகிறது.

அடுத்த செய்தி