ஆப்நகரம்

தேர்வில் இப்படி கூட சாதிக்க முடியுமா? இந்த மாணவனின் சாதனையை கொண்டாடிய குடும்பத்தினர்

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த 16 வயது சிறுவன் அக்ஷத் ஜாதவ் இவர் 10ம் வகுப்பு படித்து வந்தார். இவரது தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது.

Samayam Tamil 10 Jun 2019, 6:12 pm
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த 16 வயது சிறுவன் அக்ஷத் ஜாதவ் இவர் 10ம் வகுப்பு படித்து வந்தார். இவரது தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது.
Samayam Tamil இந்த மாணவனின் சாதனையை கொண்டாடிய குடும்பத்தினர்


இந்த தேர்வில் அக்ஷய் ஜாதவ் சரியாக 35 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். சரியாக படிக்காத மாணவர்கள் பாஸ் செய்ய வேண்டும் என யோசிப்பார்கள் இந்த மாணவன் அத்தனை பாடங்களிலும் 35 மார்க் எடுத்து பாஸ் செய்தது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


இது குறித்து அக்ஷத் ஜாதவின் தந்தை சொல்லும் போது "அக்ஷத் கால்பந்தில் தீவிர கவனம் செலுத்தினான், அதனால் படிப்பில் சரியாக கவனம் செலுத்தவில்லை. இதனால் 9ம் வகுப்பில் தோல்வியடைந்தால், 10ம் வகுப்பை பிரைவேட்டில் எழுத வைத்தோம். நான் அவர் 50 சதவீத மார்க் எடுப்பான் என நினைத்தேன். இருந்தாலும் பரவாயில்லை அதன் பாஸ் செய்ததே பெரிய விஷயம். அவரது வெற்றியை அவனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கொண்டாடினோம்" என கூறினார்.

அடுத்த செய்தி