ஆப்நகரம்

கத்தை கத்தையாக பணப்பையை ரோட்டில் இறங்கி விநியோகித்த மர்ம நபர்...!

ஜெர்மனியில் கத்தை கத்தையாக பணப்பையை ஒருவர் விநியோகித்த சம்பவம் பெரும் வைரலாகியுள்ளது.

Samayam Tamil 10 Aug 2019, 6:12 pm
ஜெர்மனியில் ஒரு மர்மநபர் கத்தை கத்தையாக பணம் நிரம்பிய பைகளை ஒரு குறிப்பிட்ட பகுதியில் வினியோகித்துள்ளார். அந்த அதிசய பையில் 2 லட்சம் யூரோக்கள் இருந்ததாக கூறப்படுகிறது.
Samayam Tamil கத்தை கத்தையாக பணப்பையை ரோட்டில் இறங்கி விநியோகித்த மர்ம நபர்


ஒவ்வொரு பையிலும் 20 ஆயரிம் முதல் 1 லட்சம் வரையிலான யூரோக்கள் இருந்துள்ளது. மேலும் இதற்குள் ஒரு பேப்பரும் உள்ளது. இந்த பேப்பரில் இந்த பணத்தை எதற்காக பயன்படுத்த வேண்டும் என்ற குறிப்பு இருந்தது.
Read More: திருடனின் அழகில் மயங்கி திருமணம் செய்த பெண் போலீஸ்...!

அதில் பெரும்பாலும் கிறிஸ்தவ தேவாலயங்களை சீரமைத்தல், சமூகவிரோதிகளால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உதவுதல், உள்ளிட்ட பல நல்ல விஷயங்களே இருந்துள்ளது.

இது முதன் முறை அல்ல கடந்த 2011ம் ஆண்டு முதலே இந்த பணப்பையை விநியோகிக்கும் பழக்கம் இருந்து வருவதாக தெரிகிறது. கடந்த 2011 முதல் 2013 வரை 2.5 லட்சம் யூரோக்கள் வரை இவ்வாறு விநியோகிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது மீண்டும் இது துவங்கியுள்ளதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
Read More: சோமாட்டோவில் பொம்மை ஆர்டர் செய்த சிறுவன்...! அதற்கு அந்நிறுவனம் என்ன செய்தது தெரியுமா?

திடீரென ரோட்டில் இறங்கி ஒரு மர்ம மனிதன் பணப்பைகளை விநியோகம் செய்த சம்பவம் பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

அடுத்த செய்தி