ஆப்நகரம்

ஆன்லைனில் விற்பனைக்கு வந்தது பாசிமணி ஊசிமணி ; கல்லூரி மாணவர்கள் புதிய முயற்சி

நரிக்குறவ இன மக்கள் செய்யும் பாசி மணி ஊசி மணியை கல்லூரிமாணவர்கள் ஆன்லைனில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர்.

Samayam Tamil 19 Dec 2019, 6:32 pm
தமிழகம் முழுவதும் நரிக்குறவ இனத்தைச் சார்ந்த மக்கள் பாசிமணி ஊசி மணி செய்து விற்பனை செய்துவருகின்றனர். இதை அவர்கள் பரம்பரை தொழிலாகவே செய்து வருகின்றனர். முன்னர் வீதி வீதியாகச் சென்று இவர்கள் பாசிமணி பாசிமணி விற்பனை செய்த நிலையில் தற்போது தெருவோரங்களிலேயே விற்பனை செய்து வருகின்றனர்.
Samayam Tamil ஆன்லைனில் விற்பனைக்கு வந்தது பாசிமணி ஊசிமணி


இந்நிலையில் சென்னையில் உள்ள கல்லூரியில் சமூகப்பணி பயிலும் மாணவர்களான தேவா, சிவரஞ்சினி, ஷ்ராவ்யா, ரித்திகா ஆகிய 4பேர் சேர்ந்து அவர்கள் பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்யும் தளத்தை உருவாக்கி நரிக்குறவர்களின் பாசிமணி ஊசிமணியை ஆன்லைனிற்கு கொண்டு கொண்டு வந்துள்ளனர்.

அவர் படி அவர் nakuras.com என்ற இணையதளத்தை உருவாக்கினர். அதில் நரிக்குறவர்களிடம் இருக்கும் பொருட்களைப் புகைப்படம் எடுத்து அதை விலையை வெளியிட்டு இணையத்திலேயே மக்கள் பொருட்களை வாங்கும் நுட்பத்தைக் கொண்டு வந்துள்ளனர்.

Also Read : குழந்தைகள் தவழும் போட்டி...! உங்கள் வாழ்நாளில் இப்படி ஒரு வீடியோவை பார்த்திருக்கவே மாட்டீர்கள்...
மேலும் அவர்கள் நரிக்குறவர்களுக்கு அந்த இணையதளத்தை எப்படிப் பயன்படுத்த வேண்டும். எப்படி மக்கள் இணையத்தில் போடும் ஆர்டர்களை பார்க்க வேண்டும் அவர்களுக்கு எப்படி அந்த பொருட்களை அனுப்ப வேண்டும். அந்த பொருட்களுக்காக மக்கள் அனுப்பும் பணத்தைப் பெறுவது எப்படி? என்பது குறித்து எல்லாம் பயிற்சி கொடுத்துள்ளனர்.

இதனால் நரிக்குறவ இனப்பெண்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இன்று நரிக்குறவர்களிடம் பொருட்கள் வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைந்துவரும் நிலையில் அவர்கள் வாழ்வாதாரத்திற்கே மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். அவர்களின் வாழ்வாதாரத்திற்காக சமூகப்பணி மாணவர்கள் எடுத்த இந்த முயற்சி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த மாணவர்கள் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

அடுத்த செய்தி