ஆப்நகரம்

Grandmother Surrogate:பேத்தியை பெற்றெடுத்த பாட்டி... மகன் பெண்ணாக மாறியதால் விபரீதம்...!

அமெரிக்காவை சேர்ந்த 61 வயது மூதாட்டி சிசிலி எலிக்டே, இவரது மகன் மேத்யூ எலிக்டே ஒரு கட்டத்தில் தன்னை ஒரு பெண்ணாக உணர துவங்கினார். அவர் உடல் ரீதியாக முழுமையான ஒரு ஆணாக இருந்தாலும் மனதளவில் அவர் தன்னை ஒரு பெண்ணாக உணர துவங்கினார்.

Samayam Tamil 4 Apr 2019, 3:55 pm
அமெரிக்காவை சேர்ந்த 61 வயது மூதாட்டி சிசிலி எலிக்டே. இவரது மகன் மேத்யூ எலிக்டே ஒரு கட்டத்தில் தன்னை ஒரு பெண்ணாக உணர துவங்கினார். அவர் உடல் ரீதியாக முழுமையான ஒரு ஆணாக இருந்தாலும் மனதளவில் அவர் தன்னை ஒரு பெண்ணாக உணர துவங்கினார்.
Samayam Tamil பேத்தியை பெற்றெடுத்த பாட்டி... மகன் பெண்ணாக மாறியதால் விபரீதம்


இதையடுத்து அவர் தனது உணர்வுகளை புரிந்துகொள்ளும் ஒரு ஆணான எல்லியோட் டவ்ஹோர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு குழந்தை பிறப்பு என்பது சாத்தியம் இல்லாத விஷயம் ஆகிவிட்டது. ஆனால் சிசிலிக்கோ தனது மகளாக மாறிய மகனுக்கு குழந்தை வேண்டும் என எண்ணினார்.
Read More: நிர்வாணமாக சென்று குற்றவாளியை கைது செய்த பெண் போலீஸ் அதிகாரி..!

சிசிலி ஏற்கனவே கருமுட்டையை எடுத்து குழந்தை பெற்றெடுக்கும் வாய்பை இழந்த நிலையில் தனது மகனிற்கு குழந்தை பெற்று கொடுக்க டாக்டரை அனுகினார்.

Read More: பாக்., பிடியில் இருந்து போனில் பேசிய அபிநந்தனிடம் அவரது மனைவி "இந்த" கேள்வியையா கேட்டார்?
டாக்டரின் அறிவுரைபடி டவ்ஹோர்த்தியின் சகோதரியிடம் இருந்து கருமுட்டை தானம் பெறப்பட்டு, அது 61 வயது மூதாட்டியான சிசிலிக்கு பொருத்தப்பட்டது. அதன் பின் சிசிலியின் மகன் மேத்யூவின் விந்தணுக்கள் அந்த கருமுட்டைக்குள் செலுத்தப்பட்டு சிசிலி கர்ப்பமானார்.

9 மாதம் கருவை சுமந்த சிசிலி தற்போது அழகான ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அதாவது. தனது பேத்தியை பாட்டியே பெற்றெடுத்துள்ளார்.

Read More: 3 வது கணவனையும் 2 கணவனையும் நண்பர்களாக்கி முதல் கணவனின் குழந்தைகளுடன் ஒரே வீட்டில் வாழும் ஜகஜால கில்லாடி பெண்...!
டவ்ஹோர்த்தியின் குடும்பத்தில் உள்ள கருமுட்டை மூலம், மேத்யூவின் விந்தனுக்களால் சிசிலி இந்த குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இந்த சம்பவம் தற்போது அமெரிக்காவில் வைரலாக பேசப்படுகிறது.

அடுத்த செய்தி