ஆப்நகரம்

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பொன்மொழிகள்!

இந்தியாவின் சுதந்திரபோராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளான இன்று அவர் கூறிய சில வீரமொழிகளை கீழே காணலாம்.

Samayam Tamil 23 Jan 2023, 9:47 am
இந்திய சுதந்திர போராட்டத்தின் மிக முக்கியமான தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். இவர் சுதந்திர போராட்ட காலத்தில் வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர்.
Samayam Tamil subash chandra bose


ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்கியதற்கு நேதாஜியும் ஒரு காரணம் இன்று நேதாஜி 1897ம் ஆண்டு ஜனவரி 23ம் தேதி பிறந்தார் ஆம் இன்று அவரின் 123 வது பிறந்தநாள் இந்த நாளின் அவர் கூறிய சில பொன் மொழிகளை காணலாம் வாருங்கள்

  • சுதந்திரம் கொடுக்கப்படுவதில்லை. எடுக்கப்படுகிறது.
  • நீங்கள் உங்களின் குருதியை கொடுங்கள். நான் உங்களுக்கு விடுதலை கொடுக்கிறேன்.
  • நமக்கென்று ஓர் இராணுவமும் அமைக்கப்பட்டு விட்டதனால், நமக்கென்று ஒரு சுதந்திர அரசை அமைப்பது சாத்தியமும், அவசியமும் ஆயிற்று. இந்தியாவின் முழு விடுதலைக்கான இறுதிப்போரை நடாத்துவதற்காகவே இந்தத் தற்காலிக அரசு பிறந்திருக்கின்றது.
  • கலங்காத உள்ளம் படைத்தவர்களே இறுதி வெற்றிக்கு உரியவர்கள்!
  • ஒரு சிந்தனைக்காக மனிதன் இறக்கலாம். ஆனால் அவனது சிந்தனைகள் அதன் பின் 1000 பேரிடம் செல்லும்.
  • நமது சுதந்திரத்திற்காக நமது ரத்தத்தை வழங்க வேண்டியது நமது கடமை.
  • நமது முயற்சிகளும் தியாகங்களும் தான் நம்மை நமது சொந்த திறனால் சுதந்திரத்தை பெற உதவும்.
  • நம்பிக்கையை என்றும் இழக்காதீர்..! இந்தியாவை அடிமைதனத்திலேயே வைத்திருக்க பூமியில் எந்த சக்தியும் இல்லை.
  • இந்தியா அழைக்கிறது..! உங்கள் ரத்தம் அழைக்கிறது...! நம்மிடம் இழக்க நேரம் எதுவும் இல்லை. எழுந்திருங்கள்..! டில்லிக்கான வழியே சுதந்திரத்திற்கான வழி..!
  • போராட்டம் இல்லாத வாழ்க்கை போர் அடித்து விடும்

அடுத்த செய்தி