ஆப்நகரம்

கணவன் புடவை வாங்கி தராததால் தூக்கு போட்டு தற்கொலை செய்த மனைவி..!

உ.பி மாநிலத்தில் புதிதாக திருமணமான பெண் ஒருவர் கணவன் புடவை வாங்கி தராததால் மனமுடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Samayam Tamil 13 Jul 2019, 5:52 pm
உ.பி மாநிலத்தை சேர்ந்தவர் அமித் இவருக்கும் அஞ்சனா என்ற பெண்ணிற்கு கடந்த மே மாதம் 13ம் தேதி திருமணமானது. இந்நிலையில் அந்த தம்பதி கடந்த வாரம் ஒரு விசேஷ வீட்டிற்கு செல்வதாக இருந்தது. அப்பொழுது அஞ்சனா தன் கணவர் அமித்திடம் தன்னிடம் எல்லாம் பழைய புடவைகளாக இருக்கிறது. புதிய புடவை வாங்கி தரும்படி கேட்டுள்ளார்.
Samayam Tamil கணவன் புடவை வாங்கி தராததால் தூக்கு போட்டு தற்கொலை செய்த மனைவி


அதற்கு அமீத் தற்போது காசு இல்லை. இருக்கிற புடவையை வைத்து அட்ஜெஸ்ட் செய்துகொள் என சொல்லியுள்ளார். இதனால் இருவருக்குமிடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. ஆனால் கடைசி வரை அமித் தனது மனைவிக்கு சேலை வாங்கி தரவேயில்லை.

இதனால் மனமுடைந்த அஞ்சனா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கணவன் புடவை வாங்கி தராதால் மனைவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி