ஆப்நகரம்

NIT Kurukshetra: கல்யாண வீட்டு பந்திக்கு கல்லூரி மாணவர்கள் ரெகுலர் அட்டென்டென்ஸ்...! ஃபுல் கட்டு கட்டுவதாக புகார்...!

உ.பி மாநிலம் குருஷேஸ்திரா வில் நேசனல் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்கனாலஜி இருக்கிறது. அங்கு படிக்கும் மாணவர்கள் அவ்வப்போது கல்லூரியை சுற்றி எங்காவது திருமண விழாக்கள், விசேஷங்கள் நடந்தால் அங்கு அழையா விருந்தாளியாக சென்று ஃபுல் கட்டு கட்டிவிட்டு வருகிறார்களாம்.

Samayam Tamil 22 Mar 2019, 3:17 pm
உ.பி மாநிலம் குருஷேஸ்திரா வில் நேசனல் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்கனாலஜி என்ற கல்லூரி இருக்கிறது. அங்கு படிக்கும் மாணவர்கள் அவ்வப்போது கல்லூரியை சுற்றி எங்காவது திருமண விழாக்கள், விசேஷங்கள் நடந்தால் அங்கு அழையா விருந்தாளியாக சென்று ஃபுல் கட்டு கட்டிவிட்டு வருகிறார்களாம்.
Samayam Tamil கல்யாண வீட்டு பந்திக்கு கல்லூரி மாணவர்கள் ரெகுலர் அட்டென்டென்ஸ்


பெரும்பாலான விசேஷ வீடுகளில் இதை கண்டுகொள்வதில்லை என்றாலும் சில இடங்களில் இது பிரச்சனையாகிறதாம். இதனால் அந்த கல்லூரியின் பெயரும் மக்கள் மத்தியில் கெட்டு வருகிறது.
Read More: மாட்டை பாலியல் வன்புணர்வு செய்த இளைஞர்...! கையும் களவுமாக வளைத்து பிடித்தது போலீஸ்..!

இதையடுத்து கல்லூரி நிர்வாகம் மாணவர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் ஒன்றை விடுத்துள்ளது.
அதில் : "நமது கல்லூரி மாணவர்கள் சிலர் அருகில் நடக்கும் திருமணம் போன்ற விசேஷ விழாக்களில் அழைப்புகள் இல்லாமல் கலந்து கொள்கின்றனர். இது முற்றிலும் தவறான மற்றும் தேவையில்லாத செயல். இனி மாணவர்கள் இது போன்ற செயலில் கட்டாயம் ஈடுபட கூடாது. இனி இதுபோன்ற செயலில் மாணவர்கள் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்" என குறிப்பிடப்பட்டிருந்தது.

Read More: பொள்ளாச்சி சம்பவத்தை மிஞ்சும் நிகழ்வு: 1600 செக்ஸ் வீடியோக்கள் லைவ்வாக ஸ்டிரீம் செய்யப்பட்ட அவலம்

மாணவர்கள் இவ்வாறு திருமண விழாக்களில் சென்று விருந்தில் கலந்து கொள்வதற்கு அந்த கல்லூரியில் உள்ள ஹாஸ்டலில் போடப்படும் சுவையே இல்லாத சாப்பாடு தான் காரணம் என சொல்லப்படுகிறது. சுவையான சாப்பாடு இல்லாமல் வேறு வழியின்றி மாணவர்கள் இவ்வாறான செயல்களில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து டுவீட்டரில் பலர் கருத்துக்களை தெரிவித்துள்ளனர் அதை கீழே காணுங்கள்.
Read More: இந்த தேர்தல்ல ஓட்டு போட கையில "மை" வைக்குறதுக்கு முன்னாடி இதை கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க...!

Read More: ஒரே பிரசவத்தில் வெறும் 9 நிமிடங்களில் 6 குழந்தைகளை பெற்றெடுத்த அதிசய தாய்...!

அடுத்த செய்தி