ஆப்நகரம்

"இரவு 8 மணிக்கு மேல் பெண்கள் வரக்கூடாது" அப்பார்ட்மெண்டிற்கு புதிய சட்டம்

ஒரு அப்பார்ட்மெண்ட்டில் ஒரே பாலினத்தை சேர்ந்த விருந்தினர் வருவதற்கு இரவு 10 வரை மட்டுமே அவகாசம், எதிர்பாலினத்தவர் வருவதற்கு இரவு 8 மணி வரை மட்டுமே அவகாசம் என்ற விதியை வகுத்துள்ளனர் இது வைரலாகி வருகிறது.

Samayam Tamil 26 Apr 2019, 5:28 pm
பெண்களிடம் பேசக்கூடாது. பெண்கள் இருக்கும் பக்கமே திரும்பி பார்க்ககூடாது இது போன்ற விதிகள் நீங்கள் படித்த பள்ளியில் கல்லூரியில் இருந்திருக்கலாம். ஆனால் நீங்கள் வளர்ந்து வேலைக்கு சென்று அதன் பின் வசிக்கும் வீட்டில் இது போன்ற விதிகள் இருந்தால்?
Samayam Tamil அப்பார்ட்மெண்டிற்கு புதிய சட்டம்


ஆம் புனேவை சேர்ந்த ஒரு அப்பார்ட்மெண்ட்டில் இது போன்ற சில விதிகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன் படி : "நீங்கள் வசிக்கும் வீட்டிற்கு ஒரே பாலினத்தை சேர்ந்த விருந்தினர் வருவதற்கு இரவு 10 வரை மட்டுமே அவகாசம், எதிர்பாலினத்தவர் வருவதற்கு இரவு 8 மணி வரை மட்டுமே அவகாசம், விருந்தினர் இரவு தங்குவதாக இருந்தால் நீங்கள் வீட்டின் ஒனரிடம் முன்னதாக அனுமதி பெற வேண்டும். 4-5 நாட்களுக்கு மேல் தங்குவதாக இருந்தால் போலீஸ் சான்றிதழ் முக்கியம் " உள்ளிட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.

அந்த விதிமுறைகள் அடங்கிய புகைப்படம் தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இது குறித்து வரும் கருத்துக்களை கீழே காணுங்கள்





அடுத்த செய்தி