ஆப்நகரம்

தள்ளாடும் வயதில், நாய் நீர் அருந்த சிரமப்பட்டு உதவும் முதியவர், மனதை உருக்கும் வீடியோ!

நாய் ஒன்று தாகத்தால் தள்ளாடிய போகுது, முதிர்ந்த வயதிலும், குழாயில் இருந்து தனது கைகளில் நீர் பிடித்து கொண்டு வந்து நாய்க்கு ஊட்டும் முதியவரின் வீடியோ.

Samayam Tamil 21 Oct 2020, 5:34 pm
மனிதனுக்கும், நாய்க்குமான பந்தம் மிகவும் நெருக்கமானது. அதற்கு மற்றொரு சாட்சியாக அமைந்திருக்கிறது இந்த வீடியோ. மேலும், இந்த வீடியோ மூலமாக, மனிதனின் தனித்துவமான மனிதநேயம் இன்றும் மாய்ந்திடவில்லை, ஆங்காங்கே சிலரிடத்தில் உயிர்ப்புடன் இருக்கிறது என்பதையும் புரிந்துக் கொள்ள முடிகிறது.
Samayam Tamil தள்ளாடும் வயதில், நாய் நீர் அருந்த சிரமப்பட்டு உதவும் முதியவர், மனதை உருக்கும் வீடியோ!


"திஸ் இஸ் ஃபாஸ்ட் புட் வேர்ல்ட் .." இந்த வாக்கியத்தை யார் கூறினாரோ தெரியவில்லை... ஆனால், இந்த உலகம் ஃபாஸ்ட் புட் போல மிக வேகமாக தான் இயங்கி வருகிறது. அது தொழில்நுட்பமாக இருக்கட்டும், உறவு பிணைப்பாக இருக்கட்டும், வந்த வேகத்தில், சேரும் வேகத்தில் காணாமல் போய்விடுகிறது. இதற்கு காரணம் என்ன? மனிதனிடத்தில் இருந்து குறைய துவங்கிய மனித நேயமும் ஒன்று.

தான் மட்டுமே இந்த உலகில் உயிர் வாழ்வதாகவும், இந்த உலகம் தனக்கு மட்டுமே சொந்தமாகவும் மனிதன் கருத துவங்கிய நாள் முதலே அழிவும் சேர்ந்து துவங்கிவிட்டது. உதாரணாமாக பாருங்களேன், சாலைகளில் இருந்து, இயற்கை வளங்களை சூறையாடுவது வரையிலும் நமது கண்டுபிடிப்புகள் அனைத்தும் மனித இனத்துக்கு மட்டுமே உதவும் வகையிலும், அவரகளது பேராசைகளை பூர்த்தி செய்யும் வகையில் தான் அமைந்துள்ளன.

ஆனால், அத்திப்பூ பூப்பது போல இந்த முதியவரின் செயல் போல, ஆங்காங்கே சிலரது நல்ல குணங்களை பார்க்கும் போது தான், இன்னும் கொஞ்சம் நாள் இந்த உலகம் மனிதரை தாங்கும் என்று எண்ணி பெருமூச்சு விட வேண்டியுள்ளது.


மனிதனுக்கு ஏதுவாக இருக்க, நீர் குழாய்கள் அமைத்தோம். ஆனால், அதனால் பிற உயிரினங்கள் எப்படி நீர் குடிக்கும் என்று நாம ஒருபோதும் எண்ணியதில்லை. இங்கே நடந்த சம்பவம் அது தான். நாய் ஒன்று தாகத்தில் தவித்த போது, தள்ளாடும் வயதில் இருந்த முதியவர் ஒருவர், சிரமப்பட்டு தனது கைகளில் நீர் ஏந்தி வந்து, நாய்க்கு நீர் ஊட்டுகிறார். இந்த வீடியோவை பார்க்கும் போதே மனம் உருகிவிடுகிறது.

அடுத்த செய்தி