ஆப்நகரம்

பொங்கல் கருப்பை தலையிலேயே வச்சு கெத்தா சைக்கில் ஓட்டிய தாத்தா...! - வைரலாகும் வீடியோ

பொங்கல் பண்டிகையின் போது கருப்பை அழகாக எடுத்து வரும் தாத்தாவின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Samayam Tamil 20 Jan 2020, 9:56 am
பொங்கல் பண்டிகை எல்லாம் முடிந்துவிட்டது. பொங்கல் எல்லோரும் சிறப்பாகக் கொண்டாடியிருப்போம். பொங்கல் விழாவிற்குக் கரும்பு வாங்கச் சென்றவர்களுக்குத் தான் அதை வீட்டிற்கு உடைக்காமல் எடுத்து வருவது எவ்வளவு சிரமம் என்பது தெரியும்.
Samayam Tamil Pongal Viral Video


உயரமான கரும்பை ரோட்டில் வரும்போது மேலே உள்ள ஒயர்கள் மீது படாமலும், பக்கவாட்டில் சாய்த்துப் பிடித்துத் தூக்கினால் முன்னால், பின்னால் செல்பவர்களுக்குப் படாமலும் கரும்பைக் கொண்டு வருவது சிரமம்.


ஆனால் சமீபத்தில் வைரலான வீடியோ ஒன்றில் முதியவர் ஒருவர் பொங்கலுக்கான பொருட்களை எல்லாம் வாங்கிக் கொண்டு கரும்பைத் தலையில் வைத்துக்கொண்டு வேகமாகச் சைக்கிளை ஓட்டி செல்கிறார். கரும்பும் கீழே விழவில்லை. மற்ற பொங்கல் சாமான்களுக்கும் பாதிப்பில்லை. சைக்கிளும் வேகமாகச் செல்கிறது.

Also Read : விண்ணிலிருந்து வந்த பயங்கர சத்தம்...! உலகம் அழிவதற்கான அறிகுறியா? ஏலியன்களின் சித்து விளையாட்டா? பதற வைக்கும் பரபரப்பு சம்பவம்

இதைப் பார்த்ததும் நெட்டிசன்கள் பலர் இந்த முதியவரைப் பாராட்டி வியத்து கருதினர். இந்த வீடியோ டிக்டாக், பேஸ்புக், ட்வீட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பல தளங்களில் வைரலாக பரவியது. இந்த முதியவர் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

அடுத்த செய்தி