ஆப்நகரம்

Varanasi : நீங்கள் காசிக்கு ரயில் பயணிக்கும் போது உங்கள் அடுத்த பெர்த்தில் சிவபெருமான் பயணிக்க வாய்ப்பு...!

காசி - மகாகல் ரயிலில் சிவபெருமானுக்காக சீட் ஒதுக்கப்பட்ட செய்தி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Samayam Tamil 18 Feb 2020, 10:42 am
ரயிலில் நீங்கள் பயணம் செய்யும் போது உங்களுக்கு அடுத்த பெர்த்திலோ முந்தைய பெர்த்திலோ சிவபெருமான் பயணம் செய்வார் எனச் சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? ஏதோ கதை விடுகிறோம் என நினைப்பீர்கள் ஆனால் அதற்கு தற்போது உண்மையிலேயே சாத்தியம் இருக்கிறது.
Samayam Tamil நீங்கள் காசிக்கு ரயில் பயணிக்கும் போது உங்கள் அடுத்த பெர்த்தில் சிவபெருமான் பயணிக்க வாய்ப்பு


கடந்த 16ம் தேதி இரண்டு மாநிலங்களை இணைக்கும் வகையில் 2 ஜோதிர்லிங்க கோவில்களை இணைக்கும் வகையில் காசி-மகாகல் விரைவுவண்டி என்ற ரயிலைப் பிரதமர் மோடி கடந்த 16ம் தேதி விடியோ கான்பரென்சிங் மூலம் திறந்து வைத்தார்.


Also See: இவ்வளவு அற்புதமான போட்டோஷாப் ஒர்க் பார்த்திருக்கவே மாட்டீங்க...!

இந்த ரயிலின் B5 கோச்சின் 64வது சீட் நிரந்தரமாகச் சிவபெருமானிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த சீட் வேறு யாருக்கும் வழங்கப்படாது. என வடக்கு ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி தீபக் குமார் தெரிவித்துள்ளார்.

இந்திய ரயில்வே வரலாற்றிலேயே ஒரு சீட்டை நிரந்தரமாக இப்படி ஒதுக்குவது இதுவே முதன்முறை. சிவபெருமானுக்காக ஒதுக்கப்பட்ட சீட்டில் அவரது புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு மலர்களை வைத்து அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் அந்த கோட்ச் முழுவதும் எப்பொழுதும் லைட் ஆன்மீக மியூசிக் ஒலித்துக்கொண்டே இருக்குமாம். அந்த கோச்சில் அசைவ உணவிற்கு அனுமதி கிடையாதாம் சைவம் மட்டுமே பரிமாறப்படுமாம். முற்றிலும் எல்இடி லைட்களால் அலங்கரிக்கப்பட்ட இந்த கோச்சில் பயணிப்பவர்களுக்கு ரூ10 லட்சம் இன்சூரன்ஸ் அன்பளிப்பாக வழங்கப்படுகிறதாம்.

இந்த சிவபெருமான் பயணிக்கும் கோச் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

அடுத்த செய்தி