ஆப்நகரம்

புல்வாமா தாக்குதல்... தியாகத்தை நினைவு கூருவோம்

புல்வாமா தாக்குதல் நடந்து 1 ஆண்டு ஆன நிலையில் அவர்களை நினைவுக்கூறும் கவிதைகளை இங்கே காணலாம்.

Samayam Tamil 14 Feb 2020, 3:59 pm
கடந்தாண்டு பிப் 14ம் தேதி இதே நாளில் காஷ்மீரில் சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற வாகனத்தில் தீவிரவாதி ஒருவர் ஒரு காரை மோதி அவர் வைத்திருந்த குண்டை வெடிக்க வைத்தார். இதில் 39 சிஆர்பிஎஃப் வீரர்கள் பலியாகினர்.
Samayam Tamil Pulwama attack


இந்தியாவில் நாம் நிம்மதியாக இருக்க நம்மை நோக்கி வரும் ஆபத்துக்களை எல்லாம் ராணுவ மற்றும் பாதுகாப்பு வீரர்கள் தான் வாங்கிக்கொண்டு நம்மைக் காக்கிறார்கள். 39 வீரர்கள் இப்படியாக ஒரு தாக்குதலில் நாம் இழந்திருப்பது வேதனையளிப்பதாக இருந்தது. பலர் இவர்களது மரணத்திற்காகக் கண்ணீர் விட்டனர்.

இன்று அந்த வீரர்கள் மறைந்து ஒரு ஆண்டு ஆன நிலையில் அந்த அந்த தாக்குதலில் மரணமடைந்தவர்களை இன்று நாம் நினைவுகூறுவதற்காகக் கவிதைகள் மற்றும் புகைப்படங்களை உங்களுக்காக இங்கே வழங்கியுள்ளோம் காணுங்கள்.

கவிதைகள்
1. தத்தளித்தவர்களைக் காப்பாற்றி
பத்திரமாய்ப்
படகில் அனுப்பிவிட்டு,
நடுக்கடல் தீவில்
நீ தனியாய்த் தவித்தாலும்,
தீப ஒளியாய்த்
தெரிவது உன்
தியாகம்தான்...!

2. எங்கள் இதயகுமுறலை
எழுத்துகளால் எழுதிட முடியாது
எங்கள் வலிகளை
பேனா மையால் ஈரபடுத்திட இயலாது
எங்கள் வாழ்க்கை வரலாற்றை
வார்த்தைகளால் நிரப்பிட
இயலாது

எங்களின் ஒவ்வொருவர்
உயிரும் உங்களின்
சந்தோஷத்திற்காகவே
உதிர்கின்றன

உணர்வுகள் தாய்மொழிக்கு
உயிர் தாய்மண்ணிற்க்கு
ஜெய்ஹந்த்.......ஜெய்ஹந்த்

3. உன் போல்
சுயநலமில்லா நாட்டுப்பற்று
வேறு எங்கு காண?

யார் யாரோ நாட்டின்
முதல் குடிமகன் என்கிறார்கள்
என்னை கேட்டால்
தோழா
நீயே பாரத நாட்டின்
முதல் குடிமகன்
நீயே இந்நாட்டின்
சுயநலமில்லா பாதுகாவலன்

4. எட்டாத உயரமெல்லாம்
எட்டிச் சென்றாய்
குளிர் தொட்டாலும்
நீயே தான்
தொடர்ந்து சென்றாய்

மலை உனை தொட்டாலும்
வெயில் உனை சுட்டாலும்
உயிர் உனை விட்டாலும்

உன் எண்ணம் எல்லாம்
ஒன்றிலே வைத்தே சென்றாய்


5. ஏதோ ஒரு மூலையில்
எவனோ ஒருவன் வருகைக்காக
காத்திருக்கும் என் துப்பாக்கியின் கண்கள்
நண்பனைக் கண்டதும்
அவனை அணைக்க ஏங்கும் குண்டுகள் .......
நண்பனின் துப்பாக்கி குண்டகளோ
என்னைக் கண்டு ஓடோடி வரும்
தசைகள் கிழிந்து
எலும்புகள் உடைந்து
உயிருக்குள் கலக்கும்
நண்பனும் நானும்
விண்வெளி வாயுளில்
மற்ற நண்பர்களுக்காக காத்திருப்போம்


அடுத்த செய்தி