ஆப்நகரம்

தனுஷ் பாடலை போட்டதற்காக சாதிவெறி தாக்குதல்! கடலூரில் சாதிவெறியர்கள் அட்டூழியம்!

கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் சாத்தப்பாடி பகுதியில் வசித்து வரும் ஆதிதிராவிடர் மக்கள் மீது சாதிய ரீதியான தாக்குதல் நடந்திருப்பது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மிருகத்தனமான முறையில் அவர்கள் தாக்கப்படும் காட்சிகள் இணையத்தில் பரவி வருகின்றன. உடனடியாக தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Authored byசுபாஷ் சந்திர போஸ் | Samayam Tamil 7 Mar 2023, 10:18 pm
கடலூர் மாவட்டம் புவனகிரி பகுதி மக்கள் திருவிழா ஊர்வலம் சென்று கொண்டிருக்கும்போது கர்ணன் படத்தில் வரும் போராடடா ஒரு வாளேந்ததா என்ற பாட்டை போட்டு கொண்டாடி கொண்டே சென்றுள்ளனர். இதை கேட்ட அருகிலிருந்த மாற்றுச்சாதியை சேர்ந்த இளைஞர்கள் 20க்கும் மேற்பட்டோர் ஊர்வலத்தில் இருந்த இளைஞர்களை தாக்கி உள்ளனர். தாக்குதல் நடத்திய இளைஞர்கள் அந்த பகுதியை சேர்ந்த வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
Samayam Tamil Cuddalore Caste Attack


அந்த இளைஞர்கள் தாக்குதல் நடத்திய பிறகு காயம்பட்டவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு செல்ல முற்பட்டுள்ளனர். ஆனால், சென்று கொண்டிருந்த ஆம்புலன்ஸை வழிமறித்த தாக்குதல் நடத்திய அதே இளைஞர்கள் பெண்கள் , முதியோர் என பார்க்காமல் அனைவரையும் கண்மூடித்தனமாக தாக்கிய வீடியோ பலரையும் உறைய வைத்துள்ளது.

ஆம்புலன்ஸை விரட்டி பிடித்து உள்ளே இருந்த குடும்பத்தினரை 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தாக்கி உள்ளனர். குறிப்பாக அந்த ஆம்புலன்ஸில் இருந்த பெண் மற்றும் அவரது கணவர் ஆகியோரையும் சரமாரியாக தாக்கும் காட்சிகள் அந்த ஆம்புலன்ஸின் பணியாளர் எடுத்த வீடியோவில் பதிவாகியுள்ளது. மிகவும் கொச்சையான வார்த்தைகளால் பேசியும், அடித்தும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

உடனடியாக தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டுமென்று பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக காவல்துறை சிலரை கைது செய்துள்ளதாகவும், பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எழுத்தாளர் பற்றி
சுபாஷ் சந்திர போஸ்
சுபாஷ் கடந்த நான்கு வருடங்களாக ஊடகத்துறையின் முன்னணி டிஜிட்டல் தளங்களில் கான்டென்ட் எழுதுபவராகவும் மற்றும் செய்தி நிறுவனங்களில் கள நிருபராகவும் பணியாற்றிய அனுபவமுள்ளவர். இயல்பில் எந்த துறை சார்ந்து எழுதும் ஆர்வம் கொண்ட சுபாஷ் தற்போது கல்வி, ஆரோக்கியம், உறவுகள் குறித்து எழுதி வருகிறார். அரசியல் மற்றும் உறவுகள் குறித்த துறையில் ஆர்வம் மிக்கவர். அவர் ஒரு lepidopterist, bibliophile மற்றும் anthophile ஆவார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி