ஆப்நகரம்

ஏற்கனவே திருமணமான பெண்ணை ஏமாந்து மணந்த கணவன்...! உண்மை நடந்ததும் நடந்த வெறிச்செயல்

பஞ்சாப் மாநிலத்தில் ஏற்கனவே திருமணமான பெண் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து பழைய கணவனுடம் உறவு வைத்திருந்ததால் ஆத்திரித்தில் இரண்டாவது கணவன் மனைவியை குத்தி கொலை செய்தார்.

Samayam Tamil 12 Jul 2019, 8:30 pm
பஞ்சாப் மாநிலம் லுதியானாவை சேர்ந்தவர் குருசரண் இவருக்கும் சுரிந்திரா என்ற பெண்ணிற்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது.
Samayam Tamil ஏற்கனவே திருமணமான பெண்ணை ஏமாந்து மணந்த கணவன்


திருமணமாகி சில மாதங்களில் சுரிந்திராவின் நடவடிக்கைகளை பார்த்து குருசரணிற்கு சந்தேகம் ஏற்பட்டது. அதன் பின்னர் அவர் நடத்திய விசாரணையில் சுரிந்திராவிற்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதுஅவர் குருசரணை ஏமாற்றி திருமணம் செய்திருப்பதையும் அறிந்தார்.

இது குறித்து சுரிந்திராவிடம் கேட்டபோது அவரிடம் இருந்து பிரிந்து விட்டதாகவும், தற்போது அந்த குடும்பத்துடன் தொடர்பு இல்லையெனவும் கூறி சமாதானம் செய்துள்ளார். ஆனால் நாட்கள் செல்ல செல்ல சுரிந்திராவிற்கு அவரது முதல் கணவர் மற்றும் குழந்தைகளுடன் தொடர்பு இருந்தது குருசரணிற்கு தெரியவந்தது.

இது குறித்து குருசரணிற்கும் சுரிந்திராவிற்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. விவகாரம் போலீஸ் வரை சென்றுள்ளது. போலீசில் சமாதானம் நடந்த போது சுரிந்திராவிற்கு ஆதரவாக அவரது சகோதரியும் மகனும் வந்துள்ளனர்.

போலீசில் சமாதானம் பேசினாலும் குருசரணிற்கு மனம் சமாதானம் ஆகவில்லை. இந்நிலையில் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து சுரிந்திரா வெளியே வந்த போது குருசரண் அவரை கூர்மையான ஆயுதங்களை கொண்டு தாக்கினார். இதில் சுரிந்திரா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியனார்.

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். திருமணமானதை மறைத்துவிட்டு வேறு ஒரு ஆண் ஒரு பெண் திருமணம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி