ஆப்நகரம்

விமானத்தில் புழுக்கமாக இருக்கிறது என காற்று வாங்க கதவை திறக்க முயன்ற பயணி...! - வைரலாகும் வீடியோ

சீனாவில் புழுக்கமாக இருக்கிறது என காற்று வாங்க விமானத்தின் கதவை பயணி ஒருவர் திறக்க முயன்ற சம்பவம் நடந்துள்ளது. இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Samayam Tamil 27 Sep 2019, 11:25 am

சீனாவின் வூகன் பகுதியில் உள்ள சர்வதேச விமானத்தில் ஷியாமென் ஏர்லைன்ஸ்சிற்கு சொந்தமான விமானம் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டிருந்தது. பயணிகள் ஏற கடைசி கால் சென்று கொண்டிருந்தது.
Samayam Tamil விமானத்தில் புழுக்கமாக இருக்கிறது என காற்று வாங்க கதவை திறக்க முயன்ற பயணி


பயணிகள் ஒவ்வொருவராக ஏறிக்கொண்டிருந்தனர். அப்பொழுது ஏற்கனவே விமானத்தில் ஏறிய பெண் விமானத்தில் காற்றே இல்லாமல் புழுக்கமாக இருக்கிறது என எண்ணி அவர் அருகிலிருந்த விமானத்தின் அவசரக் கால கதவைத் திறக்க முயற்சித்தார்.

நல்லவேளையாக இந்த முயற்சியைப் பார்த்த விமானப்பணிப்பெண் ஒருவர் கதவைத் திறக்க முயன்ற பெண்ணை தடுத்து நிறுத்தி ஏன் திறக்கிறீர்கள் எனக் கேட்ட போது தனக்குக் காற்று வரவில்லை அதனால் தான் திறக்கிறேன் என இவர் அளித்த பதில் அங்கிருந்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

Also Read : இலவச வீட்டிற்கு ஆசைபட்டு 11 பேர் சேர்ந்து 23 முறை திருமணம் செய்த கூத்து


பின்னர் அப்படியெல்லாம் செய்யக்கூடாது அது குற்றமாகக் கருதப்படும் என அந்த பெண்ணிற்கு விளக்கிய விமானப்பணிப்பெண்கள். அந்த பெண்ணின் அருகிலிருந்தவர்களிடமும் இனி இவர் இதைத் திறக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள் எனவும் எச்சரித்துவிட்டுச் சென்றனர்.

Also Read : வெளியூரில் இருந்து நாய்களுக்கு ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்த நபர்..! - குவியும் பாராட்டுகள்

இந்த சம்பவத்தை அங்கிருந்த சக பயணி ஒருவர் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாக பரவி வருகிறது.

அடுத்த செய்தி