ஆப்நகரம்

குரங்குகள் தொல்லையில் சிக்கிய கிராமம் என்ன செய்தார்கள் தெரியுமா?

உ.பியில் கிராம மக்கள் குரங்கு தொல்லையிலிருந்து தப்பிக்க என்ன செய்தார்கள் தெரியுமா?

Samayam Tamil 1 Feb 2020, 7:58 pm
உ.பி மாநிலம் சிக்கந்தர் கிராமத்தில் ஏராளமான குரங்குகள் வசித்து வருகின்றன. அந்த கிராம மக்கள் பல நாட்களாக இந்த குரங்குகளால் பெரும் தொல்லைகளைச் சந்தித்து வந்துள்ளனர். வீடுகளைத் திறந்து போட முடியாது. வீட்டு ஜன்னல்களைத் திறந்து போட முடியாது. வீட்டில் எந்த பொருளையும் மொட்டை மாடியில் காயப்போட முடியாது.
Samayam Tamil monkey


இந்த குரங்குகளின் சேட்டையைக் கட்டுப்படுத்த வனத்துறையினரிடம் புகார் அளித்தும் பலன் இல்லை. இதனால் ஒரு அந்த பகுதி மக்கள் எல்லாம் சேர்ந்து ஒரு யோசனை செய்தனர். அவர்கள் நாடக நடிகர்களின் கரடி வேட உடைகளை வாடகைக்கு எடுத்து அதைக் கிராம மக்கள் அணிந்து ஊரில் வலம் வரத்துவங்கினர்.

Also Read : ஒரே ஆளை மூன்று முறை கொல்ல முயற்சி செய்த மின்னல்... இறுதியாக அவர் கல்லறையை தாக்கி பழி வாங்கிய பயங்கரம்....

இதைப் பார்த்த குரங்குகள் கரடிகள் ஊரில் உலா வருவதாக நினைத்து குரங்குகள் எல்லாம் தெரித்து ஓடியது. இந்த சம்பவத்திற்குப் பிறகு அந்த கிராம மக்கள் தற்போது குரங்குகளிலிருந்து விடுபட்டுள்ளது. இந்த செய்தி தற்போது வைரலாக பரவி வருகிறது.

அடுத்த செய்தி