ஆப்நகரம்

ஐக்கிய அரவு அமீரகம் - இஸ்ரேல் இடையே அமைதி நிலவ இளம்பெண்கள் எடுத்த அசாத்திய முடிவு!

அரபு - இஸ்ரேல் கொடிகள் ஏந்தி, அமைதிக்காக இளம்பெண்கள் எடுத்து அற்புதமான முயற்சி, வைரல் போட்டோ!

Samayam Tamil 22 Oct 2020, 6:11 pm
Cover Image Source: Twitter/netanyahu
Samayam Tamil photos of women in uae israel flag goes viral on internet netizens says it is the picture of a historic peace deal
ஐக்கிய அரவு அமீரகம் - இஸ்ரேல் இடையே அமைதி நிலவ இளம்பெண்கள் எடுத்த அசாத்திய முடிவு!

ஐக்கிய அரபு அமீரகம் சேர்ந்த நோரா அல்வாதி எனும் பெண்ணும், இஸ்ரேல் சேர்ந்த ரோனி ஜோனன் எனும் பெண்ணும், அவரவர் நாட்டு கொடிகளை ஏந்தியபடி, புர்ஜ் கலீபா கட்டிடத்திற்கு எதிரே அமைந்திருந்த 80 மாடி ஸ்கை கிராப்பர் கட்டிடத்தில் நின்றவாறு புகைப்படம் ஒன்றுக்கு போஸ்ட் கொடுத்திருந்தனர். இந்த புகைப்படத்தை, வரலாற்று சிறப்புமிக்க அமைதிக்கான புகைப்படம் என்று கூறி ட்விட்டர் போன்ற சமூக தளங்களில் பலரும் பாராட்டி பகிர்ந்து வருகின்றனர்.

இந்த புகைப்படம் 80 மாடி உயரம் கொண்ட ஸ்கை கிராப்பர் கட்டிடத்தின் மாடி பகுதியில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தை எமிராட்டி தொழிலதிபரும் எழுத்தாளருமான ஹாசன் சஜவானி என்பவர் தான் முதன் முதலில் சமூக ஊடகத்தில் பகிர்ந்தார் என்று அறியப்படுகிறது.

ஹாசன் சஜவானி வெளியிட்ட ஓரிரு மணி நேரத்திலேயே இந்த புகைப்படம் வைரலாக பரவ துவங்கியது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அவர்களுடைய மகள் இவான்கா ட்ரம்ப் ஆகியோர் இந்த புகைப்படத்தை பகிர்ந்திருந்தனர்.



துபாயில் இருந்து ஓர் அற்புதமான புகைப்படம், இது அமைதியை உருவாக்கும் நோக்கத்துடன் மிடில் ஈஸ்ட் நண்பர்களிடம் இருந்து வெளியாகி இருக்கிறது என்று கருத்திட்டு இஸ்ரேல் அதிபர் பகிர்ந்திருந்தார். மேலும், இவான்கா, துபாயில் இருந்து ஓர் சிறந்த புகைப்படம், என்று கருத்திட்டு பகிர்ந்திருந்தார்.

இப்புகைப்படம் உருவான கதையை இனி பார்ப்போம்...
கல்ப் செய்திகளுக்கு பேசியபோது நோரா, 'இது ஒரு தற்செயலாக நடந்த சம்பவம். இஸ்ரேல் கொடியினை ஏந்தி போஸ் கொடுத்த ரோனி ஜோனன், ஒரு இஸ்ரேட் டிராவல் பிளாகர். ரோனி சுற்றுலா விஷயமாக அரபு வந்திருந்தார். தெரிந்த ஒருவர் மூலம் ரோனி உடன் அறிமுகமான நோரா, அவரிடம் ஒரு போட்டோஷூட் எடுப்பதற்கு உதவி கேட்டு அணுகியுள்ளார். அச்சமயம், இந்த போட்டோ ஷூட்டில் இருக்கும் அபாயம் அறியாமல் தலையாட்டி விட்டார் ரோனி.

போட்டோ ஷூட் எடுக்க அழைத்து செல்லப்பட்ட போதுதான், புர்ஜ் கலீபா கட்டிடத்திற்கு எதிரே அமைந்திருக்கும் 80 மாடி உயரம் கொண்ட பெரிய ஸ்கை கிராப்பர் மாடியில் இருந்து போட்டோ எடுக்கவிருப்பது அறிந்தார் ரோனி.

கட்டிடத்தின் உச்சிக்கு சென்ற பிறகு தான், உயரம் சார்ந்து தனக்கு இருக்கும் அச்சமே ரோனிக்கு தெரிய வந்துள்ளது. ஆரம்பத்தில் அச்சம் கொண்ட ரோனி, ஒரு போட்டோ எடுக்க கூட சம்மதிக்க மாட்டேன் என்று தயக்கம் காண்பித்துள்ளார். பிறகு, போட்டோஷூட் குழுவினர் அளித்த உத்வேகம் மற்றும் போட்டோஷூட் கொண்டிருந்த கருத்து போன்றவற்றின் ஈர்ப்பால், சம்மதம் தெரிவித்துள்ளார் ரோனி.

புகைப்படங்கள் புர்ஜ் கலீபா கட்டிடத்தை, 80 மாடி ஸ்கை கிராப்பர் உச்சியின் நுனியில் நின்று, அவரவர் தங்கள் நாட்டு தேசிய கொடியினை ஏந்தி நிற்பது போல எடுக்கப்பட்டது. போட்டோஷூட் முடிந்த பிறகு, நோரா உடன் நெருக்கமான நட்பு பாராட்டி உள்ளார் ரோனி.

மேலும், நோரா, நாட்டுக்காக இத்தகைய செயல்களில் ஈடுபடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. நாட்டுக்கு உதவும் இதுபோன்ற செயல்களில் அதிகம் ஈடுபடுவேன். இதற்கு எல்லாம் எனக்கு ஊக்கமாக இருந்தது என் தந்தை தான் என்றும் கூறி இருந்தார்.

அடுத்த செய்தி