ஆப்நகரம்

"வேட்டையாடு விளையாடு" ஸ்டைலில் திருமண மண்டபத்திலேயே காதலை சொல்லிய நம்ம ரியல் ஹீரோ...! சுபமாக முடிந்த காதல் கதை

புதுக்கோட்டை மாவட்டத்தில் வாய் பேச முடியாத இளைஞர் ஒருவர் தனக்கான பெண்ணை ஒரு திருமண மண்டபத்தில் பார்த்து அவரிடம் பேசி அங்கேயே காதலை சொன்ன வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Samayam Tamil 12 Nov 2019, 11:46 am
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியில் உள்ள முத்து கருப்பையா திருமண மண்டபத்தில் சமீபத்தில் ஒரு திருமண நிகழ்ச்சி நடந்தது. இந்த விழாவில் வாய்பேச முடியாத மாற்றுத் திறனாளியான ராமராஜன் (30) என்பவரும், தேவி (27 ) என்ற வாய் பேச முடியாத பெண்ணும் தனித்தனியாகக் கலந்து கொண்டனர்.
Samayam Tamil திருமண மண்டபத்திலேயே காதலை சொல்லிய நம்ம ரியல் ஹீரோ


இருவருக்கும் இரு வீட்டாரும் திருமணத்திற்காக வரன் தேடி வந்த நிலையில் இவர்கள் அந்த திருமண விழாவில் எதிர்ச்சியாக சந்தித்தனர். திருமண மண்டபமே சத்தமாக விழாக்கோலம் பூண்டிருக்க இவர்கள் அவர்களுக்குள்ளேயே சைகையில் பேசிக்கொண்டனர்.

Also Read : சிறுத்தையும் நாயும் நண்பர்களாக கொஞ்சி குலாவும் அரிய வீடியோ..!

அப்பொழுதே இருவரும் ஒருவருக்கொருவர் தங்கள் காதலைப் பரிமாறிக்கொண்டு திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதன் பின் இருவரும் அவர்கள் வீட்டாரிடம் தங்களின் திருமண விருப்பம் குறித்துக் கூறினர். அவர்களும் சம்மதித்த நிலையில் இருவருக்கும் கறம்பக்குடி முருகன் கோவிலில் திருமணம் நடந்தது.

Also Read : டிக் டாக்கில் பேயாக மாறிய பூனை- வைரலாகும் வீடியோ

வாய் பேச முடியாத இருவர், திருமண விழாவில் சந்தித்துப் பார்த்த அன்றே வேட்டையாடு விளையாடு கமல் போலக் காதலைச் சொல்லி தற்போது திருமணம் செய்துள்ள சம்பவம் அனைவரும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அடுத்த செய்தி