ஆப்நகரம்

Social Media Manager: எலிசெபத் ராணிக்கு அட்மினாக பணியாற்ற ஆள்தேவையாம்...! சம்பளம் கேட்டா உடனே போயிடுவீங்க...!

நீங்கள் ரெகுலராக சமூகவலைதளங்களை பயன்படுத்துபவரா? சமூகவலைதளங்களில் புகுந்து விளையாட தெரியுமா? உங்களை தான் இங்கிலாந்தின் அரச குடும்பம் எதிர்பார்த்து காத்திருக்கிறது.

Samayam Tamil 21 May 2019, 4:33 pm
நீங்கள் ரெகுலராக சமூகவலைதளங்களை பயன்படுத்துபவரா? சமூகவலைதளங்களில் புகுந்து விளையாட தெரியுமா? உங்களை தான் இங்கிலாந்தின் அரச குடும்பம் எதிர்பார்த்து காத்திருக்கிறது.
Samayam Tamil எலிசெபத் ராணிக்கு அட்மினா பணியாற்ற ஆள்தேவையாம்


எலிசபத் ராணி II யின் சமூகவலைதள கணக்குகளை கையாள மேனேஜர் தேவை என அரச குடும்பத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி இந்த வேலை நிரந்தர வேலையாகவும், வாரத்திற்கு 40 மணி நேரத்திற்கு வேலை செய்ய வேண்டும் எனவும் அலுவலகம் அரச குடும்பத்தின் மாளிகையிலேயே இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது போதாதா நீங்கள் அங்கு வேலைக்கு சேர?, போதாது என்றால் இதையும் கேளுங்கள் இந்த வேலைக்காக உங்களுக்கு ஆண்டிற்கு 30 ஆயிரம் யூரோக்கள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ26 லட்சம் சம்பளமாக வழங்கப்படும்.

இந்த வேலைக்கு நீங்கள் வண்ணப்பிக்க theroyalhousehold.tal.net என்ற இணையதளத்தில் ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு தகுதியாக நீங்கள் டிஜிட்டல் கம்யூகேஷனில் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். மேலும் வெப்சைட் மேனேஜ்மெண்ட் மற்றும் சமூகவலைதள கன்டென்ட் மேனேஜ்மெண்டில் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.

இது மட்டுமில்லாமல் உங்களுக்கு புகைப்படம் எடுக்கும் திறன், தரமான வீடியோக்களை எடுக்கும் திறன் இருந்தால் பிளஸ்.

அரச குடும்பத்தில் இருந்த வெளியிட விரும்பும் பதிவுகளை நீங்கள்தான் அவருக்கு அட்மினாக இருந்த சமூகவலைதளங்களில் பதிவு செய்ய வேண்டும். இதற்கு மேல் என்ன யோசனை உடனே விண்ணப்பியுங்கள்.

அடுத்த செய்தி