ஆப்நகரம்

ஸ்டைல் காட்டி உயிரை விட பார்த்த இளைஞர்...! ரயில்வே போலீசாரால் உயிர்தப்பினார் - வைரலாகும் வீடியோ

ஆமதாபாத் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற இளைஞர் நிலை தடுமாறி கீழே விழுந்த போது அங்கிருந்த ரயில்வே போலீசார் அவரை காப்பாற்றிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Samayam Tamil 26 Sep 2019, 10:45 am
குஜராத் மாநிலம் ஆமதாபாத் ரயில் நிலையத்தில் ஆஷ்ராம் எக்ஸ்பிரஸ் ரயில் நடைமேடையிலிருந்து புறப்பட்டது. அப்பொழுது அந்த ரயிலைப் பிடிக்க வந்த இளைஞர் ரயில் கிளம்பியதைப் பார்த்து வேகமாக வந்து ஏறாமல் மெதுவாக வந்து ஏற முயற்சித்தார்.
Samayam Tamil ஆமதாபாத் ரயில் நிலையம்


அவர் ஏறும்போது ரயில் வேகம் எடுத்ததால் நிலை தடுமாறி ரயிலுக்குள் அவர் காலும்,ரயிலுக்கு வெளியே அவரது உடலுமாகச் சிக்கிக்கொண்டது. இந்த பார்த்த அங்கிருந்த ரயில்வே போலீசார் இருவர் உடனடியாக சாதூர்யமாக செயல்பட்டு அவரை ரயிலுக்குள் ஏற்றிவிட்டனர். இதனால் அந்த இளைஞர் எந்த வித காயமும் இன்றி பத்திரமாக ரயிலில் ஏறினார்.

Also Read : சொந்த கல்யாணத்திற்கு 1 மணி நேரம் லேட்டாக சென்ற மாப்பிள்ளை

இந்த காட்சிகள் எல்லாம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாயிருந்தது. இந்த காட்சிகளை ரயில்வே அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் பகிர்ந்து யாரும் ஓடும் ரயிலில் ஏறவோ, இறங்கவோ வேண்டாம் என எச்சரித்துள்ளது.


எனது கிட்னியை விற்று இந்த ஹெட்செட்டை வாங்கினேன்..! - வைரலாகும் அமேசான் ரிவியூ

ஓடும் பஸ் மற்றும் ரயில்களில் ஏற, இறங்கக் கூடாது என அரசு பல முறை வலியுறுத்தியும் இளைஞர்கள் மத்தியில் அது எடுபடவேயில்லை. இதற்கான சரியான தண்டனைகள் தான் அதைத் திருத்த வழி வகுக்கும்.

அடுத்த செய்தி