ஆப்நகரம்

"என் காதலியை கொல்லப்போறேன்" போலீசிற்கு பகீர் கொடுத்த இளைஞர்

தன் காதலியை கொலை செய்யப்போவதாக போலீசிற்கு போன் செய்து சொல்லிவிட்டு காதலி கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.

Samayam Tamil 23 Jul 2019, 3:33 pm
காதலியை கொலை செய்யப்போவதாக போலீசிற்கு தகவல் தெரிவித்து காதலன் கொலை செய்துள்ள சம்பவம் ஆனது ராஜஸ்தான் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil என் காதலியை கொல்லப்போறேன் போலீசிற்கு பகீர் கொடுத்த இளைஞர்


ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகர் ஜெய்ப்பூரை சேர்ந்தவர் முகேஷ். இவர் அதே பகுதியை சேர்ந்த 20 வயது பெண் சுமந்து என்பவரை காதலித்து வந்தார்.

நேற்று மதியம் 3 மணிக்கு ஜெய்ப்பூர் போலீஸ் கண்ட்ரோல் ரூமிற்கு அழைப்பு வந்தது. அதில் பேசிய முகேஷ் தன் காதலி சுமந்துவை கொலை செய்ய போவதாக கூறி போனை கட் செய்துவிட்டார்.

அதன் பின் தன் காதலி சுமந்துவை வீட்டின் தோட்டப்பகுதிக்கு அழைத்து சென்ற முகேஷ் அங்கு வைத்து அவரை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தோட்ட வாசல் பகுதியில் தூக்கில் தொங்க விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.

இதற்கிடையில் போலீசார் போன் வந்த நம்பரை டிரேஸ் செய்து சம்பவ இடத்திற்கு செல்வதற்கு முன்னர் இந்த அசம்பாதவிதம் நடந்துவிட்டது. இதன் பின் போலீசார் இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

முகேஷ் ஏன் தன் மனைவியை கொலை செய்தார். அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்ற காரணம் தெரியவில்லை. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி