ஆப்நகரம்

புல்வாமா தாக்குதலால் நின்று போன திருமணம் மீண்டும் ஏற்பாடு ஆனது

புல்வாவமா தாக்குதலால் அப்பொழது நடக்கவிருந்த ஒரு திருமணம் பாதியில் நின்று போன நிலையில் தற்போது மீண்டும் ஏற்பாடாகியுள்ளது.

Samayam Tamil 15 Apr 2019, 4:01 pm
புல்வாமா தாக்குதல், மற்றும் அதற்கு இந்தியா பாலகோட் பகுதியில் கொடுத்த பதிலடி எல்லாம் நடந்து ஒரு மாதத்திற்கும் மேலாகிறது. ஆனால் இந்த தாக்குதல் சம்பவத்தால் இந்தியா பாக்., இடையேயான ரயில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.
Samayam Tamil புல்வாமா தாக்குதலால் நின்று போன திருமணம் மீண்டும் ஏற்பாடு ஆனது


Read More: ஓட்டுபோட ரூ21 ஆயிரம் செலவு செய்து விமான டிக்கெட் எடுத்தவரின் டிக்கெட் திடீரென கேன்சல் ஆனது... ஏன் தெரியுமா?

முன்னதாக பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த மகேந்திரசிங் என்பவருக்கும், பாகிஸ்தானை சேர்ந்த பெண் ஒருவருக்கும் கடந்த மார்ச் 8ம் தேதி திருமணம் நடக்கவிருந்தது. இந்நிலையில் இரு நாட்டிற்கும் இடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் திருமணத்திற்காக மகேந்திரசிங் பாக்., செல்ல முடியாததால் திருமணம் தள்ளி வைக்கப்பட்டது. இந்த செய்த அப்பொழுது வைரலாக பரவியது.
Read More: பிரிட்டனில் இந்தியாவின் மானத்தை வாங்கிய குஜராத்திகள்; பான் எச்சில் துப்புவதால் வந்த விணை..!

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் இறுதியில் இந்தியா - பாக்., இடையே ரயில் போக்குவரத்து மீண்டும் துவங்கியது. இதையடுத்து மீண்டும் இரு குடும்பத்தினரும் கலந்து பேசி நின்று போன திருமணத்தை மீண்டும் நடத்த முடிவு செய்தனர். இதற்காக மகேந்திரசிங்கும் பாக்., கிளம்பி சென்றார். அங்கு அவர் விரைவில் அவருக்காக நிச்சயிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்யவுள்ளார்.

அடுத்த செய்தி