ஆப்நகரம்

ஆச்சரிய சம்பவம்; பாம்பு தலையில் இத்தனை கண்களை யாரும் பாத்திருக்க மாட்டீங்க - வைரல் புகைப்படம்!

ஆர்ன்ஹெம் நெடுஞ்சாலையில் பிடிக்கப்பட்ட பாம்பின் தலையில் மூன்று கண்கள் இருந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 3 May 2019, 4:28 pm
ஆஸ்திரேலிய நாட்டின் ஆர்ன்ஹெம் நெடுஞ்சாலையில் ஆச்சரியப்படும் வகையில் பாம்பு ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இதனை வடக்கு மண்டல வனவிலங்கு பூங்கா ஊழியர்கள் பிடித்தனர்.
Samayam Tamil Three Eye Snake


அதன் தலையைப் பார்க்கும் போது, அதில் மூன்று கண்கள் இருந்துள்ளது. இதைக் கண்ட ஊழியர்கள் ஆச்சரியமடைந்தனர். அது கார்பெட் மலைப் பாம்பு வகையைச் சேர்ந்த ஆண் பாம்பு என்றும், பிறந்து மூன்று மாதங்களே ஆகியுள்ளது என்றும் தெரிவித்தனர்.

அதில் மூன்று கண்களும் இயல்பாக செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பாம்பை புகைப்படம் எடுத்து, வடக்கு மண்டல வனவிலங்கு பூங்கா தனது அதிகாரப்பூர்வ தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

அதில், வறட்சி நிலவப் போவதற்கான அடையாளம் தான் மூன்று கண்கள் கொண்ட பாம்பு. இதனை எங்கள் குழு ஆர்ன்ஹெம் நெடுஞ்சாலையில் கண்டறிந்தனர். இது 40 செமீ நீளம் கொண்டது.

இயற்கையில் ஏதோ ஒரு மாற்றம் நிகழப் போகிறது என்பதன் அடையாளமாகவே, மூன்று கண்கள் கொண்ட பாம்பு வெளிப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் பிடிபட்ட சில வாரங்களில் அந்த பாம்பு உயிரிழந்துவிட்டது குறிப்பிடத்தக்கது. இது வேதனையான விஷயம் என்று பூங்கா ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி