ரஷ்ய ஜனாதிபதியான விளாடிமிர் புடின் கடந்த செவ்வாயன்று எபிபானி (Epiphany) என்னும் பண்டிகையை கொண்டாடி வந்தார். அந்த பண்டிகையில் தண்ணீரில் மூழ்கி எழுவது என்பது ஒரு பாரம்பரிய கிருஸ்துவ சடங்காகும்.
ஜனாதிபதி எபிபானி கொண்டாடுவதை தொலைக்காட்சிகள் படம்பிடித்து நேரலையில் ஒளிப்பரப்பிக் கொண்டிருந்தன. அப்போது நீரின் வெப்பநிலை மைனஸ் 14 சேல்சியஸ் இருந்தது. அவர் தான் அணிந்திருந்த செம்மறி கோர்ட்டை கழற்றிவிட்டு பனியில் செதுக்கப்பட்ட ஒரு சிலுவையின் முன்பு மூன்று முறை மூழ்கி மூழ்கி எழுந்தார்.
68 வயதை கொண்ட புடின் கம்யூனிஸ்ட்கள் ஆட்சியின் கீழ் வளர்ந்தவர். அங்கு மதம் தொடர்பான வெளிப்படையான நிகழ்ச்சிகள் வெறுக்கப்பட்டன. ஆனால் அப்படி ஒரு இடத்தில் இருந்து ஜனாதிபதியான புடின் ரஷ்ய பாரம்பரிய விழாக்களில் அடிக்கடி வரும் ஒரு நபராக மாறிவிட்டார். மேலும் தேவாலய சமூகத்திற்காக தனது குரலை பதிவு செய்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் எபிபானி விழாவில் ரஷ்ய பாரம்பரிய விசுவாசிகள் ஜோர்டன் நதியில் இயேசு கிருஸ்து அளித்த ஞானஸ்நானத்தை நினைவு கூரும் வகையில் ஆறுகள் மற்றும் ஏரிகளில் மூழ்கி தங்களது சடங்கை நிறைவேற்றி வருகின்றனர்.
ஜனாதிபதி எபிபானி கொண்டாடுவதை தொலைக்காட்சிகள் படம்பிடித்து நேரலையில் ஒளிப்பரப்பிக் கொண்டிருந்தன. அப்போது நீரின் வெப்பநிலை மைனஸ் 14 சேல்சியஸ் இருந்தது. அவர் தான் அணிந்திருந்த செம்மறி கோர்ட்டை கழற்றிவிட்டு பனியில் செதுக்கப்பட்ட ஒரு சிலுவையின் முன்பு மூன்று முறை மூழ்கி மூழ்கி எழுந்தார்.
68 வயதை கொண்ட புடின் கம்யூனிஸ்ட்கள் ஆட்சியின் கீழ் வளர்ந்தவர். அங்கு மதம் தொடர்பான வெளிப்படையான நிகழ்ச்சிகள் வெறுக்கப்பட்டன. ஆனால் அப்படி ஒரு இடத்தில் இருந்து ஜனாதிபதியான புடின் ரஷ்ய பாரம்பரிய விழாக்களில் அடிக்கடி வரும் ஒரு நபராக மாறிவிட்டார். மேலும் தேவாலய சமூகத்திற்காக தனது குரலை பதிவு செய்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் எபிபானி விழாவில் ரஷ்ய பாரம்பரிய விசுவாசிகள் ஜோர்டன் நதியில் இயேசு கிருஸ்து அளித்த ஞானஸ்நானத்தை நினைவு கூரும் வகையில் ஆறுகள் மற்றும் ஏரிகளில் மூழ்கி தங்களது சடங்கை நிறைவேற்றி வருகின்றனர்.