ஆப்நகரம்

Kalpana Chawla: இந்தியாவின் விண்வெளி தேவதைக்கு நம் அஞ்சலியை காணிக்கையாக்குவோம்..!

இந்தியாவில் பிறந்து விண்வெளிக்கு பயணம் செய்த முதல் பெண் கல்பனா சாவ்லா தான். இவருடைய நினைவு நாள் இன்று.

Samayam Tamil 1 Feb 2019, 5:35 pm
இந்தியாவில் ஹரியானா மாநிலத்தில் கடந்த 1961ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி பிறந்தவர். இவரது தனது ஆரம்ப பள்ளியை முடித்தவுடனேயே விண்வெளி வீரராக வேண்டும் என்ற இலக்கை மனதில் ஏற்றிக்கொண்டார். பின்பு பல எதிர்ப்புகளை மீது விண்வெளி வீரர்களுக்கான படிப்பை மேற்கொண்டார். இவர்1982ல் அமெரிக்கா சென்று 1984ல் டெக்சாஸ் பல்கலை.,யில் விண்வெளி பொறியியல் துறை முதுகலைபட்டம் பெற்றார். பின்பு இவர் அதே துறையில் முனைவர் பட்டமும் பெற்று 1993ம் ஆண்டு தனியார் நிறுவனத்தில் விண்வெளி ஆய்வு விஞ்ஞானியாக பணியாற்றினார்.
Samayam Tamil remember first indian woman to fly in space kalpana chawla in his death anniversary
Kalpana Chawla: இந்தியாவின் விண்வெளி தேவதைக்கு நம் அஞ்சலியை காணிக்கையாக்குவோம்..!


அப்பொது நாசா விண்வெளிக்கு செல்பவதற்கு ஆர்வமுள்ளவர்களை விண்ணப்பிக்க கேட்டது. சுமார் 3 பேர் இதற்காக விண்ணப்பித்தனர். அதில் 6 பேர் மட்டுமே தேர்வானார்கள் அவர்களுள் கல்பனாவும் ஒருவர்.

மருத்துவதகுதி தேர்வுகள், நேர்காணல் தேர்வு என பல அடுக்கடுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டன. அதில் தேர்வாகி இந்த 6 பேரில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் விமானம் மற்றும் கிளைடர்களை ஓட்டுவது மட்டும்மல்லாமல் அதை இயக்க பயிற்று விப்பதற்கும் லைசென்ஸ் பெற்றிருந்தார்.

கொலம்பியா விண்வெளி களத்தில் இவரது முதல் விண்வெளி பணம் வெற்றிகரமாக அமைந்தது. இவரது இரண்டாவது விண்வெளி பயணம் கடந்த 2003ம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி துவடங்கியது. அப்பொழுதும் அவர் 6 விண்வெளி வீரர்களுடன் பயணித்தார்.

விண்வெளியில் பல ஆராய்ச்சிகளை முடித்துக்கொண்டு வெற்றிகரமாக பிப். 1ம் தேதி பூமியில் தரையிறங்கி கொண்டிருந்தனர். கொலம்பிய களம் பூமியில் தரையிறங்குவதற்கு சரியாக 16 நிமிடங்களே இருந்த நிலையில் யாரும் எதிர்பாராத நிலையில் கொலம்பியா விண்கலம் விண்வெளியிலேயே வெடித்து சிதறியது. இதில் விண்கலத்தில் இருந்த கல்பனா சாவ்லா உட்பட அனைவரும் உயிரிழந்தனர். அவர்களின் உயிர் விண்ணோடு கலந்து விட்டது.

இவர் இந்த உலகைவிட்டு பிரிந்தாலும் இன்று இளைஞர்களுக்கு நம்பிக்கை விதையாக மாறியுள்ளார். இது எதிர்காலத்தில் பல கல்பனா சாவ்லாக்களை உருவாக்கும். இந்தியாவில் பிறந்த கல்பனா சாவ்லாவை பெருமிதப்படுத்தும் வகையில் 2011ம் ஆண்டு முதல் இந்திய அரசு வீரதீர சாதனை புரிபவர்களுக்கு கல்பனா சாவ்லா விருதை வழங்குகிறது.

அடுத்த செய்தி