ஆப்நகரம்

வேட்டையாட சென்றவரை வேட்டையாடிய யானை ; உடலை ருசித்த சிங்கம்

காண்டாமிருகத்தை வேட்டையாட காட்டு சென்றவரை யானை கொன்று, சிங்கத்திற்கு உணவாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Samayam Tamil 9 Apr 2019, 5:01 pm
தென் ஆப்ரிக்காவில் க்ரூகர் என்ற தேசிய வன உயிரியல் பூங்கா ஒன்று உள்ளது. அங்கு சிங்கம், யானை, காண்டாமிருகம் போன்ற பல வன உயிரினங்கள் வாழ்வதால் அந்த பூங்காவிற்குள் குறிப்பிட்ட அளவிற்கு மேல் மனிதர்கள் செல்ல அனுமதியில்லை.
Samayam Tamil வேட்டையாட சென்றவரை வேட்டையாடிய யானை


இந்நிலையில் சட்டவிதிமுறைகளை மீறி 5 பேர் காண்டாமிருத்தை வேட்டையாட ஆயுதங்களுடன் சென்றுள்ளனர். அப்பொழுது அவர் தெரியாமல் யானைகளிடம் சிக்கிவிட ஆளுக்கு ஒரு புறமாக தெறித்து ஓடியுள்ளனர். அதில் ஒருவர் மட்டும் யானையிடம் சிக்கி விட்டார்.

Read More: ஒரே குதிரை சவாரியில் உலக பேமஸ் ஆன கேரளா பெண் - வைரலாகும் வீடியோ

அவரை யானை மிதித்தே கொன்று விட்டது. மற்றவர்கள் தப்பினர். இந்த விவகாரம் வெளியில் தெரிந்ததும், வனத்துறை அதிகாரிகள் காட்டுப்பகுதிக்குள் சென்று இறந்தவரின் உடலை மீட்க சென்றனர். மேலும் தப்பிவந்த 4 பேரை கைது செய்தனர். உடலை மீட்க சென்ற அதிகாரிகளுக்கு எங்கு தேடியும் உடல் கிடைக்கவில்லை.

Read More: ஏட்டு ஏகம்பரம், நாய்சேகர் இதெல்லாம் ஒன்னா சேர்த்தது தானடா தர்பார்? - மீம்ஸ்

இதையடுத்து தீவிர தேடுதல் நடத்திய பின்பு அவர் இறந்ததாக சொல்லப்படும் இடத்திற்கு சிறிது தூரத்தில் உள்ள முதலை பாலம் என்ற பகுதியில் அவரது உடைகள், அவர் கொண்டு சென்ற துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட பொருட்கள் இருந்துள்ளன. அவரது உடல் பாகங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

அதனால் அவர் உடல்களை சிங்கங்கள் வந்து சாப்பிட்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது. காண்டாமிருகத்தை வேட்டையாட காட்டு சென்றவரை யானை கொன்று, சிங்கத்திற்கு உணவாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

அடுத்த செய்தி