ஆப்நகரம்

சேவல் கொத்தியே உயிரை விட்ட பெண்...!

ஆஸ்திரேலியாவில் சேவல் ஒன்று பெண் ஒருவரை கொத்தியே கொன்றுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 2 Sep 2019, 12:46 pm
தெற்கு ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் ஒரு பெண்ணை அவர் வளர்த்து வந்த சேவலே கொத்தி கொலை செய்துள்ளது. ஆம் சேவல் கொத்தியதால் அந்த பெண் பலியாகியுள்ளார்.
Samayam Tamil சேவல் கொத்தியே உயிரை விட்ட பெண்


அவர் வீட்டின் பின் பகுதியில் சில கோழிகளை வளர்த்து வருகிறார். சம்பவம் நடந்த அன்று அவர் வழக்கம் போல வீட்டின் பின்புறம் சென்று கோழி முட்டைகளை எடுக்கச் சென்றுள்ளார். அந்த பெண்ணிற்கு வெரிஸ்கோஸ் வெயின் நோய் உள்ளது.

அவர் முட்டையை எடுக்கச் சென்ற போது அவரது கால் நரம்பைப் பார்த்த அங்கிருந்த சேவல் ஒன்று அந்த நரம்பைக் கொத்தியது. அவர் ஓடியும் விடாமல் துரத்தி நரம்பைக் கொத்தி விட்டது. அதனால் ரத்தம் வெளியாகி நடக்கமுடியாமல் போனது. அவரை காப்பாற்ற யாரும் வராததால் அவர் ரத்தம் அதிகமாக வெளியாகி அவர் பரிதாபமாகப் பலியாகிவிட்டார். சேவல் கொத்தி பெண் ஒருவர் உயிரிழந்த விஷயம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

அடுத்த செய்தி