ஆப்நகரம்

குட்டை பாவாடை அணிந்து வரும் பெண் ஊழியர்களுக்கு அதிக சம்பளம் ; அதிரடி ஆஃபர் வழங்கும் தனியார் நிறுவனம்

ரஷ்யாவில் அலுமினியம் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று இந்த ஜூன் மாதத்தில் "பெமினிட்டி மாரத்தான்" என்ற கேம்பெயின் நடந்து வருகிறது.

Samayam Tamil 3 Jun 2019, 4:40 pm
ரஷ்யாவில் அலுமினியம் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று இந்த ஜூன் மாதத்தில் "பெமினிட்டி மாரத்தான்" என்ற கேம்பெயின் நடந்து வருகிறது.
Samayam Tamil குட்டை பாவாடை அணிந்து வரும் பெண் ஊழியர்களுக்கு அதிக சம்பளம்


இந்த கேம்பெயினில் பெண்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். இதில் பெண்கள் பணிக்கு வரும் போது அவர்களது முட்டிக்கு 5 சென்டி மீட்டருக்கு கீழே இறங்காத அளவிலான ஸ்கட் அணிந்து வந்தால் அவர்களுக்கு எக்ஸ்ட்ரா சம்பளம் கொடுக்க அந்நிறுவனம் முன் வந்துள்ளது.

30 நாட்கள் நடக்கும் இந்த கேம்பெயினில் ஒவ்வொரு நாளும் இவ்வாறான ஆடைகள் அணிந்து வந்தால் அவர்களுக்கு 100 ரஷ்ய ரூபெல் ( இந்திய மதிப்பில் ரூ106) பணத்தை அந்நிறுவனம் வழங்குகிறது. இந்த கேம்பெயின் மூலம் பெண்கள் உடைகள் அணிவதில் மன தடுமாற்றத்தை போக்குவது, உடைகளில் பெண்கள் வெட்கப்பட வேண்டியது இல்லை என்பதை உணர வைக்க இது நடத்தப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆனால் இதற்கு பல இடங்களில் எதிர்ப்புகளும் கண்டனங்களும் எழுந்துள்ளது. பெண்களை குறைவான ஆடை அணியவைத்து அதற்கு அந்நிறுவனம் பணம் வழங்குவது மிக கீழ் தரமான செயல் என பலர் அந்நிறுவனத்தின் இந்நடவடிக்கையை வன்மையாக கண்டித்துள்ளனர்.

அடுத்த செய்தி