ரஷ்யாவின் கோடீசுவரர்களுக்கான பட்டியலில் 11வது இடத்திலிருப்பவர் மிக்கெய்ல் ஃப்ரிட்மேன். பல்வேறு தொழில்களைச் செய்து வரும் இவர். பல நாடுகளில் தன் நிறுவனத்தை நிறுவியுள்ளார். இவருக்கு அலெக்சாண்டர் ஃப்ரிட்மேன் என்ற 19 வயது மகன் இருக்கிறான்.
கடந்தாண்டு லண்டனில் தனது படிப்பை முடித்த அலெக்சாண்டர் சொந்த ஊருக்குத் திரும்பி சொந்த முயற்சியில் ஒரு சொந்த தொழிலைத் துவங்கி நடத்தி வருகிறார்.
அவர் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் : "என் தந்தை அவர் சம்பாதித்த சொத்துக்களை தான தர்மம் செய்ய விரும்புகிறார். அந்த சொத்துக்கள் எனக்குச் சொந்தமில்லை. என் மனதிற்குள் அந்த சொத்தின் மீது எந்த வித ஆசையும் இல்லை. இப்பொழுது நான் சொந்தமாகத் தொழில் துவங்கியுள்ளேன். நான் சம்பாதிக்கும் பணத்தை வைத்தே தற்போது நான் வாழ்கிறேன். நான் தங்குமிடம், உணவு என அத்தனை செலவுகளும் என் பணத்தில் தான். அப்பாவிடம் பணம் கேட்கமாட்டேன். என் அலுவலகத்திற்குத் தினமும் நடந்து தான் செல்கிறேன். வாடகை வீட்டில் தான் குடியிருக்கிறேன். ஒருநாள் என் அப்பாவை மிஞ்சிய பணக்காரனாக வருவேன் என நம்புகிறேன்" எனக் கூறியுள்ளார்.
Also Read : ஒரே ஆளை மூன்று முறை கொல்ல முயற்சி செய்த மின்னல்... இறுதியாக அவர் கல்லறையை தாக்கி பழி வாங்கிய பயங்கரம்....
இவரது இந்த பேட்டி சமூகவலைத்தளங்களில் வரலாகப் பரவி வருகிறது. பெரும் கோடீசுவரர்களின் மகன்கள் தன் தந்தை பார்த்த வேலையையே அவர்கள் எடுத்து நடத்துவார்கள். ஆனால் ரஷ்யாவில் இவ்வளவு பெரிய கோடீசுவரரின் மகன் தந்தையின் சொத்துக்கள் வேண்டாம் என தன் சொந்த முயற்சியால் தொழில் செய்து வருவது பலரை வியப்பிற்குள்ளாகியுள்ளது. இந்த செய்தி குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.
கடந்தாண்டு லண்டனில் தனது படிப்பை முடித்த அலெக்சாண்டர் சொந்த ஊருக்குத் திரும்பி சொந்த முயற்சியில் ஒரு சொந்த தொழிலைத் துவங்கி நடத்தி வருகிறார்.
அவர் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் : "என் தந்தை அவர் சம்பாதித்த சொத்துக்களை தான தர்மம் செய்ய விரும்புகிறார். அந்த சொத்துக்கள் எனக்குச் சொந்தமில்லை. என் மனதிற்குள் அந்த சொத்தின் மீது எந்த வித ஆசையும் இல்லை. இப்பொழுது நான் சொந்தமாகத் தொழில் துவங்கியுள்ளேன். நான் சம்பாதிக்கும் பணத்தை வைத்தே தற்போது நான் வாழ்கிறேன். நான் தங்குமிடம், உணவு என அத்தனை செலவுகளும் என் பணத்தில் தான். அப்பாவிடம் பணம் கேட்கமாட்டேன். என் அலுவலகத்திற்குத் தினமும் நடந்து தான் செல்கிறேன். வாடகை வீட்டில் தான் குடியிருக்கிறேன். ஒருநாள் என் அப்பாவை மிஞ்சிய பணக்காரனாக வருவேன் என நம்புகிறேன்" எனக் கூறியுள்ளார்.
Also Read : ஒரே ஆளை மூன்று முறை கொல்ல முயற்சி செய்த மின்னல்... இறுதியாக அவர் கல்லறையை தாக்கி பழி வாங்கிய பயங்கரம்....
இவரது இந்த பேட்டி சமூகவலைத்தளங்களில் வரலாகப் பரவி வருகிறது. பெரும் கோடீசுவரர்களின் மகன்கள் தன் தந்தை பார்த்த வேலையையே அவர்கள் எடுத்து நடத்துவார்கள். ஆனால் ரஷ்யாவில் இவ்வளவு பெரிய கோடீசுவரரின் மகன் தந்தையின் சொத்துக்கள் வேண்டாம் என தன் சொந்த முயற்சியால் தொழில் செய்து வருவது பலரை வியப்பிற்குள்ளாகியுள்ளது. இந்த செய்தி குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.