ஆப்நகரம்

சச்சின், தீபிகா என டிரெண்டாகும் #SafeHands Challenge

கொரோனா விழிப்புணர்வுக்காக உலக சுகாதார மையம் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்ட #SafeHands Challenge வைரலாக பரவி வருகிறது.

Samayam Tamil 18 Mar 2020, 1:24 pm
இன்று உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் தீவிரமாக ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனாவிலிருந்து எப்படி மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் எப்படி முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனத் தீவிரமாக ஆலோசனைகளை வல்லுநர்கள் வழங்கி வருகின்றனர்.
Samayam Tamil safe hand challenge


இந்நிலையில் கொரோனா உள்ளவர்கள் மற்றவர்களைத் தொடுவது மூலமும் கொரோனா பரவ வாய்ப்பு உள்ளதால் கைகளை எப்படிக் கழுவ வேண்டும் என்ற விழிப்புணர்வை வழங்க உலக சுகாதார அமைப்பு முடிவு செய்து உலகில் புகழ்பெற்றவர்களை வைத்து அதை விழிப்புணர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் படி #SafeHandsChallenge என்ற ஹேஷ் டேக் உருவாக்கப்பட்டுள்ளது.


அதில் உலக புகழ்பெற்ற லியோனார்டோ டிகாப்ரியோ, பிரியங்கா சோப்ரா, தீபிகா படுவானோ, அனுஷ்கா சர்மா ஆகியோர் இந்த சேலஞ்ச்களை செய்து இதைச் செய்ய மற்றவர்களையும் இதே சேலஞ்சை செய்ய அழைத்துள்ளனர்.


அதன் படி நடிகை தீபிகா படுவானே இந்த சேலஞ்சை செய்து அதன் வீடியோவை டிவிட்டரில் வெளியிட்டார். அதில் ரோஜர் பெடரர், கிரிஸ்டினோ ரோனால்டோ, விராட்கோஹ்லி ஆகியோரையும் இந்த சேலஞ்சை செய்ய அழைத்துள்ளார்.



Also Read : பிரபல எழுத்தாளர் எழுதிய கதை 46 ஆண்டுகள் கழித்து உண்மையிலேயே நடந்த அதிசயம் தெரியுமா?

இவர்கள் மட்டுமில்லாமல் சச்சின் டெண்டுல்கர், சானியா மிர்சா, மேரு கோம், ராணி ராம்பால், பிவி சிந்து, மத்திய அமைச்சர் கிரண் ரிஜூஜூ உள்ளிட்ட பலர் இந்த சேலஞ்சில் கலந்து கொண்டு தங்கள் சமூகவலைத்தளங்களில் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
.

அடுத்த செய்தி