ஆப்நகரம்

Minus 45 degree கடும் குளிரில் சட்டையில்லாமல் சுற்றிய சாது.... சித்தராக இருக்குமோ?

இமயமலையில் ஒருவர் சட்டை கூட இல்லாமல் -45 டிகிரி குளிரில் தியானம் செய்யும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

Samayam Tamil 18 Feb 2020, 10:30 am
இமயமலையில் கடும் குளிர் இருக்கும். அந்த பகுதியில் நாட்டை பாதுகாக்க ராணுவ வீரர்கள் பணி அமர்த்தப்படுவார்கள். அவர்கள் அங்கிருக்கும் நாட்களில் அங்குள்ள குளிரைத் தாங்க அவர்களுக்குப் பிரத்தியேக ஆடைகள் வழங்கப்படும். பாதுகாப்புப் பணியில் இருக்கும் வீரர்களுக்கு அப்பகுதியில் வாழச் சிறப்புப் பயிற்சிகள் வேறு வழங்கப்படும்.
Samayam Tamil sadhu dog



Also See: தமிழ் சினிமாவும் - டாம் அண்ட் ஜெர்ரியும் - அசர வைக்கும் மீம்ஸ்

இந்நிலையில் சமீபத்தில் இமயமலையில் ராணுவ வீரர்கள் பாதுகாப்பிற்காக இருக்கும் பகுதிக்கு ஒரு சாது ஒருவர் வந்தார். அவர் ஒரு சிறிய துணி மட்டுமே அணிந்திருந்தார் சட்டை, பேண்ட் எதுவும் இல்லாமல் வெற்று உடம்புடன் இருந்தார். அப்படியான குளிரில் இப்படியாக வாழ்வது மிகவும் சிரமம். அவருடன் நாய் ஒன்றும் இருந்தது. அவர் கையில் ஒரு குச்சியை வைத்துக் கொஞ்ச நேரம் தியானம் செய்துவிட்டு பின்னர் அங்கிருந்த பணியில் பல்டியடித்து விளையாடுகிறார்.


இதை அந்த ராணுவ வீரர் தனது செல்போனில் விடியோ எடுத்து அதைப் பகிர்ந்துள்ளார். இந்த பகுதியில் குளிர் -45 டிகிரி இருக்கும் எனச் சொல்லப்படுகிறது. இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகப பரவி வருகிறது. பலருக்கு இவர் எப்படி கடும் குளிரில் சட்டை போடாமல் இருக்கிறார் என்ற ஆச்சரியம் ஏற்பட்டுள்ளது. இந்த வீடியோக்கள் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

அடுத்த செய்தி