ஆப்நகரம்

பெண்ணிற்கு பாம்பு பிறக்கப்போவதாக கிளம்பிய புரளி...! சாமியாரால் நள்ளிரவில் பரபரப்பான கிராமம்

கரூர் மாவட்டத்தில் ஒரு பெண்ணிற்கு நள்ளிரவில் பாம்பு பிறக்கப்போவதாக புரளி கிளம்பியதால் அந்த கிராமமே பரபரப்பானது. ஆனால் எதுவும் நடக்காமல் போனது இது குறித்த விரிவான செய்தியை கீழே படியுங்கள்.

Samayam Tamil 11 Nov 2019, 3:02 pm
கரூர் மாவட்டம் லாலாப்பேட்டையை அடுத்த மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் ராதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), 45 வயதாகும் இவருக்கும் வேடசந்தூர் பகுதியைச் சேர்ந்த ராஜன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
Samayam Tamil நல்ல பாம்பு


திருமணமாகி பல ஆண்டுகளாகியும் இவர்களுக்குக் குழந்தை பாக்கியமில்லை. இதற்காக இவர்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்து எதுவும் பலன்தரவில்லை. இந்நிலையில் ராதா குழந்தை வரம் வேண்டி வேடசந்தூரில் உள்ள புற்றுக்கோவில் ஒன்றிற்கு சென்று வாரம் ஒரு முறை வழிபாடு செய்து வந்தார்.

Also Read : ரூ90க்கு வாங்கிய குவளையை ரூ4.2 கோடிக்கு விற்பனை செய்த பெண்...! எப்படி இது சாத்தியம்?

அப்பொழுது ஒரு நாள் ராதாவிற்கு திடீரென கர்ப்பமானதற்கான அறிகுறிகள் தென்பட்டது. இதையடுத்து ராதா புற்றுக்கோவிலில் உள்ள சாமியாரைப் போய் பார்த்துள்ளார். அவர் கூறிய விஷயம் தான் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாமியார் ராதாவிடம் , ராதாவின் வயிற்றிற்குள் நாகப்பாம்பு வளர்ப்பதாகவும் அது பவுர்ணமி நாள் நள்ளிரவு 12.20 மணிக்கு பிறக்கும் எனவும் சொல்லியுள்ளார். இதைக் கேட்ட ராதா அதிர்ச்சியடைந்தார். இது குறித்து வீட்டிலும் தெரிவித்தார்.

Also Read : ரூ90க்கு வாங்கி குவளையை ரூ4.2 கோடிக்கு விற்பனை செய்த பெண்

இந்த செய்தி எப்படியோ ஊர் மக்களுக்குக் கசிந்துவிட்டது. பலர் ராதாவிற்குப் பாம்பு பிறக்கப்போவதாகப் பேசிக்கொண்டனர். ஆனால் சிலர் இதைப் புரளி என்றும் பேசினர். இந்நிலையில் பௌர்ணமி நாளான இன்று அதிகாலையில் 12.20க்கு குழந்தை பிறக்கும் என நினைத்து பலர் அந்த அதிசயத்தைப் பார்க்க ராதாவின் வீட்டிற்கு முன்பு கூடினர்.

பெண்ணிற்குப் பாம்பு பிறக்கப்போகும் சம்பவமும் வைரலாக பரவியது. ஆனால் அப்படியான எந்த சம்பவமும் நடக்கவில்லை. மாறாக யாரோ பெண்ணிற்குப் பாம்பு பிறக்கப்போகிறது என 108 ஆம்புலன்ஸிற்கு தகவல் தெரிவித்தனர். நள்ளிரவில் ராதாவின் விட்டிற்கு வந்த ஆம்புலன்ஸ் ராதாவை மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றது

Also Read : மனித முகம் போல மீன் முகம்...! - வைரலாகும் வீடியோ

மருத்துவமனையில் அவரை பரிசோதித்த டாக்டர்கள் அந்த பெண் கர்ப்பமாகவே இல்லை எனக் கூறினர். போலிச்சாமியாரின் சொல்லைக் கேட்டு பெண்ணிற்குப் பாம்பு பிறக்கப்போகிறது என நம்பி இருந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

போலி சாமியார் சொன்னதைக் கேட்டு தனக்குப் பாம்பு பிறக்கப்போவதாக ஒரு பெண் நம்பியதை பற்றித்தான் வைரலான பேச்சு சமூகவலைத்தளங்களிலும், கரூர் சுற்று வட்டார பகுதிகளிலும் அதிகமாகப் பேசப்படுகிறது.

அடுத்த செய்தி