ஆப்நகரம்

ஒரு சந்தோச செய்தி, இனிமேல் நேப்கின், டாம்பன் இலவசம். ஆனால்...

உலகிலேயே முதல் நாடாக ஸ்காட்லாந்து தனது நாடு முழுவதும் பெண்களுக்கு மாதவிடாய் கால பொருட்களான நாப்கின், டாம்பன்களை முற்றிலும் இலவசமாக அளிக்கப்படும் என சட்டம் நிறைவேற்றியுள்ளது.

Samayam Tamil 26 Nov 2020, 10:56 am
கடந்த செவ்வாய்க்கிழமை (24, நவம்பர் 2020) அன்று ஸ்காட்லாந்து உலகின் முதல் நாடாக தனது நாட்டின் பெண்கள் அனைவருக்கும் மாதவிடாய் கால பொருட்களான நாப்கின், டாம்பன் போன்ற பொருட்களை இலவசமாக அளிக்கப் போவதாக சட்டம் நிறைவேற்றியுள்ளது. இது, உலக வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Samayam Tamil scotland becomes first country in the world to provide free sanitary napkin tampon to their women
ஒரு சந்தோச செய்தி, இனிமேல் நேப்கின், டாம்பன் இலவசம். ஆனால்...


புதியதாக ஸ்காட்லாந்து சாட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தில், இலவசப் பொருட்கள் பட்டியலில் மாதவிடாய் பொருட்களை சேர்த்துள்ளது. பொது இடங்களில், சமூக கூடங்களில், யூத் க்ளப் மற்றும் மருந்தகங்களில் இனிமேல், பெண்கள் மாதவிடாய் நாப்கின், டாம்பன் போன்ற பொருட்களை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும், வருமான வரி கட்டுவோரின் பங்களிப்பில் இருந்து ஆண்டுக்கு 24 மில்லியன் பவுண்டுகள் இதற்காக ஒதுக்கப்படவிருக்கிறது. இந்திய மதில் 236 கோடி ரூபாய் ஆகும்.

இந்த தீர்மானம் ஸ்காட்லாந்து சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. ஸ்காட்லாந்து ஃபர்ஸ்ட் மினிஸ்டர் நிகோலா, இந்த பாலிசி பெண்களுக்கு மிகவும் முக்கியமானது என்று கூறி இருந்தார். மேலும், தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த சட்டத்தை நிறைவேற்றும் உலகின் முதல் நாடு ஸ்காட்லாந்து என்பதில் பெருமை கொள்வதாக, பதிவிட்டிருந்தார்.


இனிமேல் ஸ்காட்லாந்தில் பெண்கள் மாதவிடாய் நாட்களில் கவலைப்பட அவசியமில்லை, இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க மாற்றம் என்று ஸ்காட்லாந்து தலைவர்கள் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

கடந்த 2018ம் ஆண்டில் இருந்து ஸ்காட்லாந்து பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பெண்களுக்கு இலவச நாப்கின், டாம்பன் அளித்து வருகிறது. இந்த வகையிலும் உலகின் முதல் நாடாக ஸ்காட்லாந்து பெயப்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

பிரிட்டனில் 10% பெண்கள் நாப்கின் பொருட்கள் வாங்க போதிய பொருளாதார வசதி இன்றி அவதிப்படுவதாக அறியப்படுகிறது.

கடந்தாண்டு வரையிலும், இந்தியாவில் வெறும் 57% பெண்கள் தான் மாதவிடாய் நாட்களில் நாப்கின் பயன்படுத்துகிறார்கள் என ஒரு ஆய்வு தகவல் கூறுகிறது. நகர்புற பெண்கள் 77%, கிராமப்புற பெண்கள் 48.5% பேர் தான் நாப்கின் பயன்படுவதாக அறியப்படுகிறது.

இந்தியாவின் ஸ்கட்லாந்து போல இந்த சட்டத்தை ஒருமனதாக நிறைவேற்றினால், இந்தியாவின் கோடிக்கணக்கான மகள்கள் அந்த 3 நாட்களில் நிம்மதி பெருமூச்சு விடுவர்.

அடுத்த செய்தி