ஆப்நகரம்

பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்ணை திருமணம் செய்த தமிழக இளைஞர்

சிவகங்கையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பிலிப்பைன்ஸ் நாட்டுப் பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.

Samayam Tamil 3 Jun 2020, 3:38 pm
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த கோபால் - வசந்தா தம்பதியினரின் மூத்த மகன் நிரவின். இவர் சிங்கப்பூரில் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். அங்கு இவருக்கும் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த மேரிஜேன் அல்புரோ என்ற பெண்ணிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் காதலித்துவந்துள்ளனர்.
Samayam Tamil sivagangai marriage


இந்நிலையில் இவர்கள் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். ஆனால் இவர்கள் திருமணத்திற்கு மேரிஜேன் வீட்டில் சம்மதம் தெரிவிக்கவில்லை. ஆனால் நிரவின வீட்டில் சம்மதித்ததால் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

இந்நிலையில் இவர்களது திருமணம் திருப்பரங்குன்றத்தில் மணப்பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பையும் மீறி திருமணம் நடந்தது. இந்த திருமண விழாவில் மணமகள் சார்பில் அவரது தோழிகள் மட்டுமே கலந்துகொண்டனர். மணமகன் சார்பில் உறவினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Also Read : இதில் இருக்கும் சிறுவன் இறந்து ஒராண்டிற்கு பின்பு எடுக்கப்பட்ட போட்டோ இது...

நாடு, மொழி, கலாச்சாரம் அனைத்தையும் தாண்டி இன்று இவர்களது காதல் வெற்றி பெற்றுள்ளது. இந்த செய்தி சமூகவலைத்தளங்களில் வரலான நிலையில் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்துவருகிறது.

அடுத்த செய்தி