ஆப்நகரம்

இதை பார்த்தால் நிச்சயம் உங்கள் கண்கள் கலங்கும்...

அமெரிக்காவில் தந்தை கொரோனவிற்காக தனிமைப்படுப்பட்டநிலையில் மகன் ஜன்னல் வழியாக அவரை பார்த்து பேசும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

Samayam Tamil 19 Mar 2020, 10:15 am
உலகம் முழுவதும் கொரோனா வைரசிற்காக சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். கொரோனா பரவாமல் தடுப்பதற்காக கொரோனா குறித்த அறிகுறி இருப்பவர்களையும் கொரோனா தொற்று இருப்பவர்களையும் தனிமைப்படுத்தி வருகின்றனர். இதுவரை கொரோனாவிற்காக உலகம் முழுவதும் சுமார் 9 ஆயிரம் பேர் பலியாகிவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Samayam Tamil corona dad son


இந்நிலையல் அமெரிக்காவின் மினசோட்டா பகுதியில் உள்ள விஸ்பரிங் பைன்ஸ் அசிஸ்டட் லிவிங் என்ற மையத்தில் பணியாற்றும் சாண்டி ஷாமில்டன் என்பவர் சமீபத்தில் தனது சமூகவலைத்தள பக்கத்தில் ஒரு புகைப்படம் ஒன்றைப் பதிவு செய்திருந்தார். அந்த புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகப் பரவி வருகிறது.


Also Read : தன் மகனின் மரணத்தை முன்னரே கணித்துவிட்டாரா ப்ரூஸ் லீ?

அந்த புகைப்படத்தில் ஒரு வீட்டில் தந்தை கொரோனா அறிகுறி காரணமாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவர் தனிமையாக உணரக்கூடாது என்பதற்காக அவரது மகன் கண்ணாடி ஜன்னலுக்கு வெளியே அமர்ந்தவரது தந்தையுடன் பேனில் பேசிக்கொண்டிருக்கிறார். இந்த புகைப்படம் காண்பவர்களை எல்லாம் கண்ணைக் கலங்க வைத்து விடுகிறது. இந்த புகைப்படம் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

அடுத்த செய்தி