தென் ஆப்ரிக்காவின் கவ்டெங் பகுதியைச் சேர்ந்தவர் கோஸிம் தாமரா சிட்டோல் இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கர்ப்பம் தரித்தார் அப்பொழுது டாக்டர்கள் இவரை பரிசோதனை செய்து பார்த்த போது இவரது வயிற்றில் அதிகமான குழந்தைகள் இருப்பதாக சந்தேகம் வந்தது. இதையடுத்து இவர்கள் ஸ்கேன் செய்து பார்த்த போது வயிற்றில் 8 குழந்தைகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து நாளாக நாளாக இவரது வயிறு மிகப்பெரிய அளவில் இருந்தது.
இந்நிலையில் இவர் 7 மாதம் 7 நாட்கள் கர்பமாக இருந்த போதே இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையஐத்து இவர் கடந்த 7ம் தேதி பிரிட்டோரியா பகுதியில் உள்ள சி- செக்ஷன் என்ற மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்ந்தார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக ஸ்கேனில் 8 குழந்தை தான் தெரிந்த நிலையில் அவருக்கு பிரசவத்தில் 10 குழந்தைகள் பிறந்தன. அதில் 7 குழந்தைகள் ஆண் குழந்தைகள் 3 பெண் குழந்தைகள் இது டாக்டர்களுக்கே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை உலகில் ஒரே பிரசவத்தில் 9 குழந்தை பிறந்தது தான் சாதனையாக இருந்தது. ஆனால் இவர் ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். இதற்கு முன்னர் மிலன் ஹலிமா என்ற பெண் 9 குழந்தைகளை பெற்றெடுத்திருந்தார்.
இது குறித்து அவரது கணவர் டிபுகோ த்தோஸ்டேஸி என்பவர் கூறிய போது: "என் மனைவியின் பிரசவம் எளிதாக இல்லை. பிரசவ காலத்தில் கடும் கால் வலி மற்றும் நெஞ்சு எரிச்சலால் கடுமையாக அவதியுற்றார். எங்களுக்கு வயிற்றில் உள்ள குழந்தை எல்லாம் உயிருடன் இருக்குமா? அதிகமான குழந்தை இருப்பதால் அத்தனை குழந்தைகளும் உயிருடன் இருப்பது கடினம் என டாக்டர்கள் தெரிவித்தனர். கடவுளிடம் செய்த பிரார்த்தனையின் பலனாய் 10 குழந்தைகள் பிறந்துள்ளது" என்றார்.
தற்போது அவர் பெற்றேடுத்த 10 குழந்தைகளும் உயிருடன் ஆரோக்கியமாக இருக்கிறது. இந்த தம்பதிக்கு ஏற்கனவே ஆறு வயதில் ஒரு இரட்டை குழந்தை இருக்கிறது. அவர்களுடன் இந்த 10 பேரும் சேர்ந்து 12 குழந்தைகள் இந்த தம்பதிக்கு. இதையடுத்து அந்த மருத்துவமனை டாக்டர்கள் இந்த 10 குழந்தைகள் ஒரே பிரசவத்தில் பிறந்ததை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற வைக்க விண்ணப்பித்துள்ளனர்.
தற்போது கின்னஸ் சாதனை குழுவினர் இது உலக சாதனை தானா? அல்லது வேறு எங்காவது இது போன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளதா என ஆய்வு செய்து வருகின்றனர். இதுவரை எதுவும் பதிவாகவில்லை என்றால் இதுவே கின்னஸ் சாதனையாக பதிவு செய்யப்படும் என கின்னஸ் புத்தக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இவர் 7 மாதம் 7 நாட்கள் கர்பமாக இருந்த போதே இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையஐத்து இவர் கடந்த 7ம் தேதி பிரிட்டோரியா பகுதியில் உள்ள சி- செக்ஷன் என்ற மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்ந்தார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக ஸ்கேனில் 8 குழந்தை தான் தெரிந்த நிலையில் அவருக்கு பிரசவத்தில் 10 குழந்தைகள் பிறந்தன. அதில் 7 குழந்தைகள் ஆண் குழந்தைகள் 3 பெண் குழந்தைகள் இது டாக்டர்களுக்கே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை உலகில் ஒரே பிரசவத்தில் 9 குழந்தை பிறந்தது தான் சாதனையாக இருந்தது. ஆனால் இவர் ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். இதற்கு முன்னர் மிலன் ஹலிமா என்ற பெண் 9 குழந்தைகளை பெற்றெடுத்திருந்தார்.
இது குறித்து அவரது கணவர் டிபுகோ த்தோஸ்டேஸி என்பவர் கூறிய போது: "என் மனைவியின் பிரசவம் எளிதாக இல்லை. பிரசவ காலத்தில் கடும் கால் வலி மற்றும் நெஞ்சு எரிச்சலால் கடுமையாக அவதியுற்றார். எங்களுக்கு வயிற்றில் உள்ள குழந்தை எல்லாம் உயிருடன் இருக்குமா? அதிகமான குழந்தை இருப்பதால் அத்தனை குழந்தைகளும் உயிருடன் இருப்பது கடினம் என டாக்டர்கள் தெரிவித்தனர். கடவுளிடம் செய்த பிரார்த்தனையின் பலனாய் 10 குழந்தைகள் பிறந்துள்ளது" என்றார்.
தற்போது அவர் பெற்றேடுத்த 10 குழந்தைகளும் உயிருடன் ஆரோக்கியமாக இருக்கிறது. இந்த தம்பதிக்கு ஏற்கனவே ஆறு வயதில் ஒரு இரட்டை குழந்தை இருக்கிறது. அவர்களுடன் இந்த 10 பேரும் சேர்ந்து 12 குழந்தைகள் இந்த தம்பதிக்கு. இதையடுத்து அந்த மருத்துவமனை டாக்டர்கள் இந்த 10 குழந்தைகள் ஒரே பிரசவத்தில் பிறந்ததை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற வைக்க விண்ணப்பித்துள்ளனர்.
தற்போது கின்னஸ் சாதனை குழுவினர் இது உலக சாதனை தானா? அல்லது வேறு எங்காவது இது போன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளதா என ஆய்வு செய்து வருகின்றனர். இதுவரை எதுவும் பதிவாகவில்லை என்றால் இதுவே கின்னஸ் சாதனையாக பதிவு செய்யப்படும் என கின்னஸ் புத்தக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.