ஆப்நகரம்

நேரலையில் வேலையை ரிசைன் செய்த செய்தியாளர்... அடுத்து நடந்தது பயங்கர காமெடி...!

ஸ்பெனில் நாட்டைச் சேர்ந்த செய்தியாளர் ஒருவர் லாட்டரியில் தனக்கு லாட்டரியில் முதல் பரிசு கிடைத்ததாக நினைத்து லைவ்விலேயே வேலையை ரிசைன் செய்த சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது.

Samayam Tamil 27 Dec 2019, 12:30 pm
ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர் நடாலியா என்ற பெண் செய்தியாளர். இவர் கிறிஸ்துமஸ் லாட்டரி பரிசு நிகழ்ச்சியை நேரடியாகத் தொகுத்து வழங்கிக்கொண்டிருந்தார். அவரும் அந்த லாட்டரி சீட்டை வாங்கியிருந்தார்.
Samayam Tamil lottery


முதல் பரிசாக அந்த லாட்டரி சீட்டிற்கு ரூ220 கோடி என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் லாட்டரி வெற்றி பெற்ற எண் அறிவிக்கப்பட்டபோது அவரது லாட்டரியின் எண் அறிவிக்கப்பட்டது. அதைக் கேட்டதும் தனக்குத்தான் முதல் பரிசு வந்தது என நினைத்து நேரலையிலேயே துள்ளிக் குதித்துள்ளார்.

மேலும் அவர் நேரலையில் நான் இனி வேலைக்கு வரமாட்டேன். என்று கத்தியுள்ளார். இதைப் பார்த்ததும் எதிர்முனை தொகுப்பாளர்கள். செய்வது அறியாது திகைத்துக்கொண்டிருந்தனர்.


ஆனால் இந்த சம்பவம் நடந்து அவர் பணத்தைப் பெறச் சென்றபோது தான் அவர் ரூ 4 லட்சம் மட்டுமே வென்றுள்ளார் என்றும், முதல் பரிசை வேறு ஒருவர் வென்றுள்ளார் என்றும் தெரியவந்தது. இந்த வீடியோ தற்போது உலகம் முழுவதும் வைரலாக பரவி வருகிறது.

அடுத்த செய்தி