இலங்கையின் கிழக்கு பகுதியில் மின்னரியா விலங்குகள் சரணாலயம் இருக்கிறது. இங்கு 81 யானைகள் பாராமரிக்கப்பட்டு வருகின்றன. இலங்கையை பொருத்தவரை புத்த மத நாடு என்பதால் அங்க யானைகள் மிக முக்கியமான விலங்காக பார்க்கப்படுகிறது. யானைகள் வைத்திருப்பது அந்நாட்டின் வளத்தை காட்டுவதற்கான குறியீடாக அந்நாட்டு மக்கள் பார்த்து வருகின்றனர். 1975ம் ஆண்டு முதல் இந்த யானைகள் சரணாலயம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த சரணாயலத்தில் வளர்ந்து வந்த சுராங்கி என்ற 25 வயதான யானை அதிசயமாக ஒரே நேரத்தி இரட்டை குட்டியை ஈன்றுள்ளது. பொதுவாக யானைகளிடம் இவ்வாறு ஒரே நேரத்தில் இரண்டு குட்டிகள் வருவது அபூர்வம், இந்நிலையில் இந்த யானை தற்போது 2 குட்டி போட்டுள்ளது. இந்த குட்டியானைகளுக்கு தந்தை 17 வயதான அதே காப்பகத்தில் உள்ள பாண்டு என்ற யானை தான்.
இந்த சுராங்கி யானை ஏற்கனவே கடந்த 2009ம் ஆண்டு ஒரு ஆண் யானையை ஈன்ற நிலையில் தற்போது இரண்டாவது பிரசவத்தில் இரட்டை யானைகளை ஈன்றுள்ளது. தற்போது குட்டி யானைகள் பார்க்க சிறியதாக இருந்தாலும் ஆரோக்கியமாக உள்ளதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். அதே நேரத்தில் தாய் யானையும் ஆரோக்கியமாக உள்ளது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்
இந்த சுராங்கி யானை ஏற்கனவே கடந்த 2009ம் ஆண்டு ஒரு ஆண் யானையை ஈன்ற நிலையில் தற்போது இரண்டாவது பிரசவத்தில் இரட்டை யானைகளை ஈன்றுள்ளது. தற்போது குட்டி யானைகள் பார்க்க சிறியதாக இருந்தாலும் ஆரோக்கியமாக உள்ளதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். அதே நேரத்தில் தாய் யானையும் ஆரோக்கியமாக உள்ளது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்