ஆப்நகரம்

சென்னை காதலனை காண இலங்கையில் இருந்து ஓடி வந்த பெண்... அடுத்து நடந்த அதிர்ச்சி...!

இலங்கையை சேர்ந்த செல்வராஜின் மகள் மலர்மேரி. இவருக்கும் சென்னையை சேர்ந்த அவினாஷ் என்பவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகம் ஏற்பட்டது. முதலில் நட்பாக சென்ற இவர்களது பழக்கம். நாளாடைவில் காதலாக மாறியது. கடந்த 7 மாதங்களாக இவர்கள் ஒருவரை ஒருவர் நேரில் சந்திக்காமல் காதலித்து வந்துள்ளனர்.

Samayam Tamil 28 Mar 2019, 6:37 pm
இலங்கையை சேர்ந்த செல்வராஜின் மகள் மலர்மேரி. இவருக்கும் சென்னையை சேர்ந்த அவினாஷ் என்பவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகம் ஏற்பட்டது. முதலில் நட்பாக சென்ற இவர்களது பழக்கம். நாளாடைவில் காதலாக மாறியது. கடந்த 7 மாதங்களாக இவர்கள் ஒருவரை ஒருவர் நேரில் சந்திக்காமல் காதலித்து வந்துள்ளனர்.
Samayam Tamil சென்னை காதலனை காண இலங்கையில் இருந்து ஓடி வந்த பெண்


இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் மலர்மேரி விமானம் மூலம் சென்னைக்கு தன் காதலனை சந்திக்க வந்துவிட்டார். அவரை சந்தித்த அவினாஷ், மலர்மேரியை ஒரு தனியார் விடுதியில் தங்க வைத்திருந்தார்.
Read More: குழந்தைகள் பெற்றுக்கொள்ள தடை...! குலதெய்வ கோபத்தால் புதிய சட்டம் போட்ட கிராமம்...!

அதன் பின் அவர்கள் அவ்வப்போது சென்னையில் பல இடங்களை சுற்றி வந்துள்ளனர். இந்நிலையில் திடீர் என அவினாஷ், மலர்மேரிக்கு இலங்கைக்கு செல்ல டிக்கெட் எடுத்து கொடுத்துள்ளார். ஆனால் மலர் மேரி இலங்கைக்கு செல்ல மறுத்துவிட்டார்.
Read More: 3 நிமிடத்தில் 300 கி.மீ. இலக்கை தாக்கிய ஏவுகனை..! மிஷன் சக்தியால் இந்தியாவிற்கு என்ன நன்மை?

இந்நிலையில் மலர்மேரிக்கும், அவினாஷிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் ஒரு நாள் முழுவதும் மலர் மேரி தங்கியிருந்த லாட்ஜில் அவரது அறையில் இருந்து எந்த வித சத்தமும் பல மணிநேரமாக வரவில்லை. அதனால் சந்தேகமடைந்த லாட்ஜ் உரிமையாளர்கள் அறையை திறந்து பார்த்த போது அங்கு மலர்மேரி தூக்கில் தொங்கியுள்ளார்.
Read More: தொடர்ந்து 3 வாரம் தேர்வையும் மறந்து தூங்கிய கல்லூரி மாணவி...! காரணம் என்ன தெரியுமா?

இதையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு அவினாஷை போலீசார் கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி