ஆப்நகரம்

“கிளையை ஒடிக்காமல் திருடவும்”- திருடர்களை மதித்து தொங்கவிடப்பட்ட வைரல் போஸ்டர்

தற்போதுள்ள ஸ்மார்போன் காலத்தில் எந்த ஒரு மனதை கவரும் நிகழ்வோ அல்லது புகைப்படத்தை பார்த்தால் அதை உடனடியாக சமூக வலைத்தளங்களில் ஒரு ரவுண்டடித்து வைரலாவது வழக்கமாக உள்ளது.

Samayam Tamil 23 Feb 2019, 6:48 pm
தற்போதுள்ள ஸ்மார்போன் காலத்தில் எந்த ஒரு மனதை கவரும் நிகழ்வோ அல்லது புகைப்படத்தை பார்த்தால் அதை உடனடியாக சமூக வலைத்தளங்களில் ஒரு ரவுண்டடித்து வைரலாவது வழக்கமாக உள்ளது.
Samayam Tamil tree


போர் ஏற்பட்ட பகுதியில் சிறுவர்களின் பார்வை, சில வாரங்களுக்கு முன் வைரலான குழந்தைகள் செருப்பை வைத்து செல்ஃபி எடுப்பது போன்ற புகைப்படங்கள் படு வேகமாக வைரலானது.


கிளையை ஒடிக்காமல் திருடவும்:
பல வீடுகளில் வளர்க்கப்படும் பழ மரங்கள் அல்லது முருங்கை காய் உள்ளிட்ட மரங்கள் வளர்க்கப்படும் போது, அவ்வழியாக போகும் பலர் மரத்தில் உள்ள காய், கனிகளை பறிப்பது நடப்பது வழக்கம்.


அப்படி வீட்டில் வைத்திருக்கும் முருங்கை மரத்தில் அவ்வழியாக செல்லும் பலர் முருங்கை காயை பறிப்பதை பார்த்து, பாதிக்கப்பட்ட ஒரு வீட்டுக்காரர், என்ன செய்வது என்று தெரியாமல், “கிளைகளை ஒடிக்காமல் திருடவும்” என்று ஒரு பிரிண்ட் அவுட் எடுத்து மரத்தில் தொங்க விட்டுள்ளார்.


அதே சமயம் மற்றொரு போஸ்டரில், “இரண்டு காய்களை மட்டும் திருடவும்.” எனவும் ஒரு காலண்டர் அட்டையில் கட்டி தொங்க விட்டுள்ளார்.

அடுத்த செய்தி