ஆப்நகரம்

சூரிய உதயத்தை 40 நிமிடம் தள்ளி போட்ட நித்தியானந்தா...! இந்த விஷயம் சூரியனுக்கு தெரியுமா?

நித்தியானந்தா சமீபத்தில் தான் கூறியதால் தான் சூரியன் 40 நிமிடம் தாமதமாக உதித்ததாக பேசியது வைரலாகியுள்ளது.

Samayam Tamil 5 Jul 2019, 7:13 pm
சர்ச்சைக்குள் நித்யானந்தாவிற்கு அப்படி ஒரு பொருத்தம். எப்பொழுது நித்தியானந்தா - ரஞ்சிதா வீடியோ வெளியானதோ அப்பொழுது முதல் சர்ச்சை அவரை தொடர்ந்து கொண்டே வருகிறது.
Samayam Tamil சூரிய உதயத்தை 40 நிமிடம் தள்ளி போட்ட நித்தியானந்தா


ரஞ்சிதா விவகாரத்தை சட்டப்படி செய்த தவறில்லை என அவர் சமாளித்த நிலையில் அடுத்து மதுரை ஆதின வாரிசு விவகாரம் வந்தது. அதன் பின்பு மதுரை ஆதினம் தனது வாரிசு பொறுப்பில் இருந்து நித்யானந்தாவை நீக்கினார்.

அதன் பின்பு அவர் பேசிய எம்சி ஸ்கோட், மீ இன் தி மீ ஆகிய பேச்சுகள் பெரும் அளவிற்கு வைரலாகியது. இந்தநிலையில் சமீபத்தில் அவர் புதிதாக ஒரு விஷயத்தை பேசி வைரலாகியுள்ளது.

அந்த வீடியோவில் அவர் பேசியதாவது : "சூர்ய உதயத்தில் தான் இன்றைய நாள் துவங்குகிறது. ஆனால் அதில் இன்று ஒரு மாற்றம் நிகழ்த்தை கவனித்தீர்களா? இன்று சூர்யன் மிக தாமதாக உதித்தது. இன்று காலை நான் தியானத்தை முடிக்க கால தாமதமாகிவிட்டது. நான் தியானத்தை முடிக்கும் வரை சூர்யன் உதிக்ககூடாது என கட்டளையிட்டேன். அதன் படி நான் தியானத்தை 40 நிமிடம் கழித்து முடித்தவுடன் தான் இன்று சூர்ய உதயம் நிகழ்ந்துள்ளது. இன்று தாமதாக சூர்யன் உதித்தற்கு நான் தான் காரணம்" என பேசியுள்ளார்.

இதை கேட்து காது குளிர்ந்து போன அவரது பக்தைகள் கைதட்டி வரவேற்றனர். எம்சி ஸ்கோட் வீடியோ போல இந்த வீடியோவும் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அடுத்த செய்தி