ஆப்நகரம்

2 பெண்களை திருமணம் செய்து கொள்ளாவிட்டால் சிறை தண்டனை...! புதிய சட்டம் வருகிறது..!

சுவாசிலாந்தில் ஒவ்வொரு ஆணும், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து கொள்ளாவிட்டால் சிறை தண்டனை வழங்கப்படும் என அந்நாட்டு அரசர் அறிவித்ததாக தகவல்.

Samayam Tamil 25 May 2019, 4:25 pm
சுவாசிலாந்தில் ஒவ்வொரு ஆணும், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து கொள்ளாவிட்டால் சிறை தண்டனை வழங்கப்படும் என அந்நாட்டு அரசர் அறிவித்ததாக தகவல்.
Samayam Tamil 2 பெண்களை திருமணம் செய்து கொள்ளாவிட்டால் சிறை தண்டனை


ஆப்ரிக்க நாடான சுவாசிலாந்து நாட்டில் உள்ள ஆண்கள் கட்டாயம் இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்ய வேண்டும் என்றும் அவ்வாறு குறிப்பிட்ட வயதிற்கு மேல் குறைந்தது இரண்டு பெண்களையாவது திருமணம் செய்யாத ஆண்களை சிறையில் தள்ள அந்நாட்டு அரசர் உத்தரவிட்டிருப்பதாகவும், மேலும் ஆப்ரிக்காவில் சில நாடுகளில் இது சாதாரண விஷயம் தான் என்பதால் பெரிய அளவில் பேசப்படவில்லை எனவும் டுவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் சில தகவல்கள் வைரலாக பரவியது.

ஆனால் அதற்கு பதிலளிக்கும் வகையில் அந்நாட்டின் செய்தி தொடர்பாளர் டுவிட்டரில் சுவாசிலாந்தில் உள்ள ஆண்கள் எத்தனை பெண்களை கட்டாயம் திருமணம் செய்யவேண்டும் என்பது குறித்து அரசர் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை பரவி வரும் தகவல் தவறானது என விளக்கமளித்துள்ளார்.

அடுத்த செய்தி