ஆப்நகரம்

ஸ்வீடன் அரசு உடலுறவை விளையாட்டாக அறிவித்ததா? ஐரோப்பிய செக்ஸ் சாம்பியன்ஷிப்!

உலகிலேயே முதன் முறையாக உடலுறவை விளையாட்டாக அறிவித்து போட்டிகள் நடத்த இருக்கிறது ஸ்வீடன் நாடு. ஜூன் 8 முதல் ஐரோப்பிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளையும் நடத்த உள்ளது.

Authored byசுபாஷ் சந்திர போஸ் | Samayam Tamil 8 Jun 2023, 11:16 am
இது வரை எத்தனையோ விளையாட்டு போட்டிகளை நாம் பார்த்திருப்போம். உலக அளவில் அந்தந்த நாடுகள், மாநிலங்கள், ஏன் பகுதிகள் சார்ந்து கூட பல்வேறு பாரம்பரிய பழக்க வழக்கங்களும், விளையாட்டுகளும் இருக்கின்றன.
Samayam Tamil Sweden


உடலுறவு விளையாட்டு!
ஆனால், உலகம் இதுவரை கண்டிராத வகையில் உடலுறவை விளையாட்டு போட்டியாக அங்கீகரித்து அதற்காக சாம்பியன்ஷிப் போட்டியும் நடத்த உள்ளது ஸ்வீடன் நாடு. ஐரோப்பிய நாடுகள் எப்போதுமே உறவு முறை மற்றும் உடலுறவு சார்ந்த விஷயங்களில் இந்தியாவை விட மிக வேகமாக இயங்கி கொண்டிருப்பதாக ஒரு கருத்து உண்டு.
Chennai Memes : மழை சார், மழை சார் டெய்லி வருவீங்களா? நாளைக்கு வருவீங்களா? ஐ லவ் யூ மழை சார்! சென்னை மழை மீம்ஸ்!

ஸ்வீடன் அதிரடி அறிவிப்பு!
அதை மீண்டும் நிரூபிக்கும் வகையில் ஸ்வீடன் நாடு முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. உலக அளவில் பால் புதுமையினர் உரிமைகள் மற்றும் பெண்களின் உரிமைகள் என பலவற்றிற்காக இன்னும் போராட்டம் நடத்தி கொண்டிருக்கையில், ஸ்வீடன் நாடு உடலுறவை விளையாட்டாக அறிவித்து, அதற்காக போட்டியும் நடத்த போவது பல நாடுகளின் புருவத்தை உயர்த்த செய்துள்ளது.

ஐரோப்பிய செக்ஸ் சாம்பியன்ஷிப்
ஸ்வீடிஷ் செக்ஸ் ஃபெடரேஷன் தலைமையில் வருகின்ற ஜூன் 8ம் தேதி ஐரோப்பிய செக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்த உள்ளது ஸ்வீடன் . இந்த போட்டியில் பல்வேறு வகையான பிரிவுகளில் போட்டிகள் நடக்க உள்ளன. ஒவ்வொரு போட்டியும் 40 முதல் 45 நிமிடங்கள் வரை நீடிக்குமாம். இதில் சிறப்பாக போட்டியிடும் தம்பதிகளுக்கு 5 முதல் 10 பாயிண்டுகள் தரப்படும். அதன் மூலம் அதிக பாயிண்டுகள் பெறுபவர்கள் சாம்பியன்ஷிப் பட்டத்தை பெறுவார்கள்.

மனஉறுதி அதிகரிக்கும்!
உடலுறவை விளையாட்டாக மாற்றுவது தவிர்க்க முடியாதது என்றும், இதில் கலந்து கொள்பவர்களின் மனம் மற்றும் உடல்ரீதியான ஆரோக்கியம் அதிகரிக்கும் என்றும் சுவீடிஷ் செக்ஸ் ஃபெடரேஷனின் தலைவர் ட்ராகன் ப்ராட்டிச் கூறியுள்ளார்.
எழுத்தாளர் பற்றி
சுபாஷ் சந்திர போஸ்
சுபாஷ் கடந்த நான்கு வருடங்களாக ஊடகத்துறையின் முன்னணி டிஜிட்டல் தளங்களில் கான்டென்ட் எழுதுபவராகவும் மற்றும் செய்தி நிறுவனங்களில் கள நிருபராகவும் பணியாற்றிய அனுபவமுள்ளவர். இயல்பில் எந்த துறை சார்ந்து எழுதும் ஆர்வம் கொண்ட சுபாஷ் தற்போது கல்வி, ஆரோக்கியம், உறவுகள் குறித்து எழுதி வருகிறார். அரசியல் மற்றும் உறவுகள் குறித்த துறையில் ஆர்வம் மிக்கவர். அவர் ஒரு lepidopterist, bibliophile மற்றும் anthophile ஆவார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி